Wednesday, October 31, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 5 (பகுதி -1)



நாகராஜனுடன் இணைந்து திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் ஆரம்பித்த சாம்பு நடராஜ ஐயர், ஒரு காலகட்டத்தில்
என் எஸ் என் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு குழுவினை ஆரம்பித்தார்,

இவரது குழுவில் ஜெயசங்கர், வீரராகவன் ஆகியோர் நடித்தனர்.

பின்னர் வீரராகவன், தன் உறவினர் சுந்தரராஜன் என்பவரை நடராஜனுக்கு அறிமுகப்படுத்த, அவரும் இக்குழுவில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த சுந்தரராஜன் தான் கே பாலசந்தரின் ராகினி ரெக்ரியேஷன்ஸ் குழுவில் மேஜர் சந்திரகாந்த்..நாடகத்தில் மேஜராக நடித்தவர்.பின்னாளில் மேஜர் என்ற அடைமொழி அவர் பெயருடன் சேர்ந்து "மேஜர்" சுந்தர்ராஜன் என அழைக்கப்பட்டு, திரையுலகிலும் புகழ் பெற்றவர் ஆவார் .

என் எஸ் என் தியேட்டரில் மேஜர் சுந்தரராஜன் நடிக்க ஆரம்பித்தார்.இவர் நடித்த "டைகர் தாததாச்சாரி" நாடகம் பெரிதும் பேசப்பட்ட நாடகம் ஆனது

நடராஜன் , மூப்பின் காரணமாக  நாடகத்துறையில் இருந்து ஓய்வு பெற அக்குழுவின் பொறுப்பை சுந்தரராஜன் ஏற்றார்.குழுவின் பெயரையும் "பத்மம் ஸ்டேஜ்" என்று மாற்றினார்.இவரது குழுவில் ஸ்ரீகாந்த், சிவகுமார் ஆகியோர் நடித்தனர்

அப்பாவி,சந்ததி,சொந்தம், கல்தூண்,அச்சாணி, தீர்ப்பு ஆகியவை இவர்கள் மேடையேற்றிய சில நாடகங்கள்

பின்னர் வியட்நாம்வீடு சுந்தரம் இக்குழுவிற்காக "ஞானஒளி" நாடகத்தை எழுதினார்.

இந்நாடகமே , பின்னர் மேஜர் ஏற்ற வேடத்தை சிவாஜி ஏற்க திரைப்படமானது (வீரராகவன் ஏற்ற இன்ஸ்பெக்டர் வேடத்தை மேஜர் திரையில் ஏற்றார்)

நாகராஜனும், நடராஜனும் நாடக உலகிற்கு பல திறமையுள்ள நடிகர்களை உருவாக்கித் தந்தனர் எனலாம் 

No comments: