Thursday, October 11, 2018

நாடகப்பணியில் நான் - 83



எங்களது நெஞ்சங்கள் வாழ்த்தட்டும் என்ற பரத் எழுதிய நாடகம்..முழுக்க முழுக்க எங்களது குழுவில் நடித்து வந்த ராம்கி என்ற நடிகரின் திறமையை வெளிக் கொண்ர வேண்டும் என்ற எண்ணத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட நாடகத்தின் அனைத்துக் காட்சிகளிலும் வரும் வீரபாகு என்ற பாத்திரம்.

ராம்கியும் அப்பாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்தார்,

இந்த இடத்தில் ஒன்றை சொல்ல ஆசைப்படுகின்றேன்..

ராம்கியின் திறமைக்கு..அவர் கலையுலகில் பிரகாசமாக இருக்க வேண்டியவர்.

அவரை கலையுலகு சரியாக பயன் படுத்த வில்லையா? அல்லது அவர் தன் திறமையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையா? என்பது இதுவரை எனக்கு புரியாத புதிராகவே உள்ளது

இந்நாடகத்தில் அவரைத் தவிர முக்கியப் பாத்திரங்களில் நான், மணிபாரதி மற்றும் கல்யாணி என்றநடிகை ஆகியோரும்   இருந்தோம்
நாடகம் வெற்றி நாடகமாக அமைந்ததுடன் வீயெஸ்வி தனது விமர்சனத்தில்..விமர்சனம் எழுத அழகிய தலைப்பினைக் கொடுத்த குழுவினரை நெஞ்சம் வாழ்த்துகிறது எனவும் குறிப்பிட்டார்

No comments: