Friday, June 19, 2020

அப்பா- 1

"அப்பா"க்கள் மிகவும் பாவம்.

அம்மாவிற்குக் கொடுக்கக்கூடிய பாசத்தில் பாதியளவும் அப்பாக்களுக்கு மகன்கள் கொடுப்பதில்லை.இதை..அவர்கள் அப்பாவாகும் போதுதான் உணருகிறார்கள்.

பத்துமாதம் அன்னை கருவில் சுமக்கிறாள் குழந்தையை.அது உண்மை.அது இயற்கையும் கூட.ஒவ்வொரு மக்கப்பேறின் போதும் உடலில் ஒரே நேரம் 22 எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் எவ்வளவு வேதனையோ, அவ்வளவு வேதனையை ஒரு அன்னை அந்த நேரத்தில் அனுபவிக்கிறாள்.அவளுக்கு ஒவ்வொரு மகப்பேறும் ஒரு மறுபிறவிதான்.இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆனால்..தந்தையின் பங்கு வாழ்க்கையில் என்ன? வாழ்நாள் முழுதும் அவர் தன் பெற்ற மழலைகளை நெஞ்சில் சுமக்கிறார்.

அவனுக்காக,அவளுக்காக..அவர் எதிர் காலத்திற்காக உழைக்கிறார்.ஒளிமயமான அவர்கள் வாழ்விற்காக நல்ல கல்வியினை அளிக்கின்றான்.தன் சக்திக்கு மீறி அவர்களை செலவு செய்து படிக்க வைக்கின்றான்.கடனே வாங்காதவன் வாழ்நாள் கடனாளி ஆகின்றான்.

இப்படியெல்லாம் தன் குடும்பத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைக்கும் அவனுக்கோ அதற்கான அதிகாரம் குறைவாகவே உள்ளது.

மகனிடம் மனம் விட்டு அவனால் பேச முடிவதில்லை.

மகனும், தாயிடம் பேசும் அளவோ, இல்லை தாயிடம் இருக்கும் பாசத்தின் அளவோ தந்தையிடம் வைப்பதில்லை.

இது தந்தையர் வாங்கி வந்த வரம்.

(தொடரும்)

No comments: