Friday, June 19, 2020

அப்பா - 2

கடல்..கரையில் ஆரவாரத்துடன் அலைகளாக வந்து..வந்து ஆர்ப்பரிக்கிறது.

ஆனால்..ஆழ்கடல்..எவ்வளவு ஆழம் என தெரியாமல்..ஆரவாரம் இன்றி கிடக்கிறது.

தந்தையும்..அப்படித்தான்..பார்க்க சந்தோஷமாக ..அலைகடல் போல் ஆர்பரித்துக் காணப்பட்டாலும்..அவர் ஆழ்மனதில்..குடும்பத்தைப் பற்றி, தம் மக்கள் பற்றி..எவ்வளவு பொறுப்புகள், சிந்தனைகள்,ஆசைகள், தியாகங்கள் ஓடிக்கொண்டிருக்கும் தெரியுமா?

அதன் ஆழம் கடலாழம் போல..

குடும்பத்தை ஒரு பெரிய தழைத்தோங்கும் மரத்துக்கு ஒப்பிட்டால்..அம்மரத்தைத் தாங்கிப் பிடிக்கும் வேர் நம் கண்களுக்குத் தெரியவில்லை.மரத்தின் அழகே தெரிகிறது.ஆம்..தந்தை மரத்தின் வேரினைப் போலத்தான்.

ஒரு அழகான வீடு கட்டுகிறோம்.அந்த அழகினை அனைவரும் வந்து ரசிக்கிறார்கள்.அருமையான் பிளான்..அழகாய் மாடி, படுக்கை அறை, சமையல் அறை, பூஜை அறை என்றெல்லாம் பாராட்டப்படும் அவ்வீட்டினை சுமந்து நிற்பது கண்ணுக்குத் தெரியா அஸ்திவாரம்.அந்த அஸ்திவாரம் ஆட்டங்கண்டால்? என்னவாகும்.
தந்தையும்..அழகிய குடும்பத்தின் அஸ்திவாரம் போலத்தான்.

சுமைதாங்கிகள் சுமையின் பாரத்தைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.அப்பாவும் குடும்பத்தின் சுமைதாங்கி.

கண்ணின் இமை போன்றவர் அப்பா..கண்களைக் காக்க வேண்டிய இமையைக் காப்பது யார்?

இப்படி அப்பாக்களின் பெருமையை சொல்லிக் கொண்டேப் போகலாம்.

(தொடரும்)

No comments: