Wednesday, June 3, 2020

வள்ளுவர் பெண்களைப் போற்றவில்லையா - 7

இன்று சொல்ல்ப போகும் திருக்குறள்.."தெய்வம் தொழாஅள் " போல ஒன்று.

இந்தக் குறளையும் சொல்லி, பெண்ணியம் பேசுவோர், வள்ளுவர் பெண்களை இழிவுப் ப்டுத்துகிறார் என்பார்கள்.

அக்குறளைப் பார்க்குமுன்..திருவாசகப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்..

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

பொருள்-

குழந்தைக்கு வேண்டிய பாலை எப்போது தர வேண்டும் என்று நினைத்து நினைந்து தருபவள் தாய். அந்த தாயை விட என் மேல் அன்பு செலுத்தி, நீ என்னுடைய உடலை உருக்கி, எனக்குள் இருக்கும் ஒளியை பெருக்கி, அழிவு இல்லாத தேனினை தந்து, வெளியில் இருந்த செல்வமான சிவ பெருமானே, நான் உன்னை தொடர்ந்து வந்து இறுக்கப் பிடித்துக் கொண்டேன்.


அது ஒருகைக்குழந்தை.அது பசிக்கு அழும்போது..தாய்க்கு அவளறியாது தாய்மை அவள் மார்பகங்களில் பாலினை சுரக்க வைக்கின்றது.மார்பகங்கள் கனக்கும்.பெண்மைக்கு ,உயிர் காக்கும் அவயமாக இயற்கை படைத்துள்ளது மார்பகங்கள்.

அதை கவர்ச்சியாக்கியது..மனிதனின் காம எண்ணங்கள்.

ஆனால்..மார்பகங்கள்,உயிர் வளர தாய்மைக்கு இயற்கையின் வரப்பிரசாதம்.

வள்ளுவரும் அந்த எண்னத்திலேயே இக்குறளைச் சொல்லியுள்ளார்.

இப்போது படியுங்கள் இக்குறளை.விரசம் தோன்றாது.

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று  (402)

 கல்லாதவனின் சொல் கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண் மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

சுருங்கச் சொன்னால்..கல்லாதவன் சொல் கேட்பது என்பது..பிஞ்சு உயிரின் உயிர் காக்கும் (மார்பகங்கள் அற்ற..அதவது)தாய்மை குணம் இல்லாத பெண்ணைப் போல விரும்பத்தாகதது எனக் கொள்ளலாம்.

வள்ளுவர் தாய்மையை, பெண்மையை போற்றவே செய்கிறார் இக்குறள் மூலமும்.



No comments: