Thursday, June 4, 2020

வள்ளுவர் இலக்கியவாதியா?

இந்த வள்ளுவர் இருக்கிறாரே..சரியான புரியாத புதிராய் இருந்திருப்பார். என்றே தோன்றுகிறது

ஏன் சொல்கிறேன் என்றால்..ஏற்கனவே குறள் ஒன்றே முக்கால் அடி..அதையும் புரிந்து கொள்ள முடியாதபடி சொல்வதில் வல்லவர்.

முதல் இலக்கியவாதி இவராய்த்தான் இருந்திருக்க வேண்டும்.

பின் பாருங்களேன்..இந்த  திருக்குறளை..

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது (101)

இதைப் படிப்பவர்களுக்கு , அது என்ன செய்யாமல் செய்த உதவி .ஒரு உதவியை..செய்யாமல் எப்படி செய்ய முடியும் ?எனக் குழப்பம் ஏற்படும்

ஒரு சிறு  சம்பவத்தின் மூலம் விளக்குகின்றேன்..

கந்தனுக்கு பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள்.ஐநூறு ரூபாய் குறைகிறது.மணியினிடம் அதிகப்படியாக ஆயிரம் ரூபாய் இருந்தது.ஆனாலும், கந்தன் கேட்டதற்கு தன்னிடம் பணமே இல்லை என்றுவிட்டான்.இங்கு கந்தனுக்கு,மணி உதவவில்லை

பிறிதொரு சமயம், மணிக்கு உடல்நலமில்லை.உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.கையிலோ காசில்லை.அப்போது கந்தனிடம் பணம் இருக்க, கந்தன் "மணி தனக்கு உதவி செய்யாத போதும் அவனுக்கு  உதவினான்"

இதுதான் மணி செய்யாமல் கந்தன் அவனுக்கு செய்த உதவி

இதைத்தான் வள்ளுவர்.. மேற்கண்ட குறளில் சொல்லியுள்ளார்.

முன்னர் உதவி செய்யாதவர்க்கு ஒருவன் செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும்,விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடகாது.

No comments: