Monday, June 22, 2020

#TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 2 -கே.மாதவன்





1906ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தவர் கே.மாதவன்.

இவரது தந்தை கேசவன் ஆசாரி தாய் காளியம்மாள் ஆவர்.

இவரது தாத்தா ஸ்ரீ அனந்தபத்மனாப ஆசாரி, திருவாங்கூர் அரசபரம்பரையினரின் ஆதரவினைப் பெற்று,அவர்களின் அரண்மனையினைப் பராமரிக்கும் பணியினையும், ஸ்ரீ பத்மனபசுவாமி கோயிலை பராமரிக்கும் பணியினையும் மேற்கொண்டு வந்தார்.இவரது மாமா கலைப்பள்ளி ஒன்றிற்கு பிரினிசிபாலாய் இருந்துவந்தமையால்..ஆரம்பகால கல்வியினை அங்குக் கற்றார்.

இவரது அபாரத் திறமையினைக் கண்ட இவரது தமையனார், இவரை சென்னைக்கு அனுப்பினார்.

சென்னையில் பிரபலமாய் இருந்த கன்னையா நாடகக்குழுத் தலைவர் கன்னையாவின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.அக்குழுவினர் நாடகங்களுக்கு படுதாக்களை வரையும் பணியினை ஏற்றார்.

பின்னர்,என் எஸ் கே நாடகக்குழு,டி கே எஸ் குழு ஆகியவற்றிற்கும் சீன் வரையும் பணி இவரைச் சேர்ந்தது.

பின்னர் ஜெமினி வாசன் இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தார்.விளம்பரத்திற்காக இவர் வரைந்த பேனர்கள் எங்கும் பேசப்பட்டன.ஜெமினி வாசன் இவரை "Father of Movie Banners" என அறிவித்தார்.

இயற்கியச் சித்திரங்கள்,புராண சித்திரங்கள்,சரித்திரச் சித்திரங்கள் என தனி ஆளுமையினைப் பெற்றார் மாதவன்.

ஆனந்த் திரையரங்க உரிமையாளராய் இருந்த ஜி.உமாபதி நடத்திவந்த் "உமா" என்ற பத்திரிகைன் முகப்பு அட்டைகளை வரைந்தார்.

உமா, முத்தாரம்,கலைமகள்,காவேரி,சாவி,கல்கி, ஆனந்தவிகடன், அமுத சுரபி,தாமரை ஆகிய அனைத்து பத்திரிகைகளிலும் இவரது ஓவியங்கள் வந்தன.இவர் ஓவியம் இல்லா தீபாவளி மலர்களே இல்லை என்ற நிலை.

நாடக திரைசீலைகள் (சீன்), சினிமா பேனர்கள், வாழ்த்து அட்டைகள்,காலண்டர் ஆர்ட்ஸ் என எல்லாவற்றிலும் மாதவன் கோலோச்சினார்

முதல் உலகத் த்மிழ் மகாநாட்டு மலர் முதல்,வாழ்த்துஅட்டை வரை மாதவனிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவர் வரைந்த பிரபலத் தலைவர்கள், காந்தி,நேரு,இந்திரா காந்தி,ராஜாஜி, காமராஜர்,அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் படங்க
ள் ராஜாஜி ஹாலில் மாட்டப்பட்டன.

இவரது புகழ் சிங்கப்பூர்,மலேஷியா, ஸ்ரீ லங்கா, லண்டன் எனப் பரவின.

இவர் வரைந்த ஓவியங்கள் ஆனந்த் திரையரங்கையும் அலங்கரித்தன.

முதல்வராய் இருந்த அண்ணா,இவருக்கு "ஓவிய மன்னர்" என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தார்.

1977ஆம் ஆண்டு அமரர் ஆனார் மாதவன்.

No comments: