Friday, April 1, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(1-4-11)


நமது தேசியச் சின்னமான அசோகச் சக்கரம் கொண்ட உருவம் நாம் அறிவோம்.இச் சின்னத்தில் மூன்று சிங்கங்களின் தலையைத் தவிர்த்து ஒரு குதிரையும், ஒரு மாடும் உள்ளன.



2)மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூன்று கோடி சிற்பங்கள் உள்ளனவாம்



3)சிரியுங்கள்..நகைச்சுவை உணர்வு மன இறுக்கத்தைப் போக்கி உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.நல்ல சிரிப்பு மூளையின் தேக்கத்தை அகற்றும்.உடம்பின் ரத்த ஓட்டம் குறைவான பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.


4)பொதுவாக மனிதக் கண்களுக்கு புலப்படும் எந்த ஒரு பொருளும் நிறமுள்ளதாகவோ அல்லது ஒளியையாவதோ பிரதிபலிக்கின்றன.இரண்டும் இல்லாதது நம் கண்களுக்குத் தெரியாது.இதற்கு உதாரணம் காற்று


5)வெயில் காலம்..வெளியில் அலைந்தால்..கண்ட தண்ணீர், ஜூஸ் அருந்தினால் 'கப்' பென பிடித்துக் கொள்ளும் ஜலதோஷம்.இன்று ஜலதோஷம்..ஆகவே குளிக்கவில்லை என பலர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.ஆனால்..எப்படிப்பட்ட ஜலதோஷம் ஆனாலும் தினமும் குளிப்பதே சிறந்தது.ஏனெனில்..தொற்று நோய்க் கிருமிகளால் தான் ஜலதோஷம் வருகிறது.குளிப்பதால் ஜலதோஷம் அதிகரிக்காது.

6)நடிகர் வடிவேலுவை மிகப் பெரிய ஐந்து கொடுத்து அழகிரி குரூப் வளைத்துவிட்டதாக ஜூனியர் விகடன் கூறுகிறது..ஆனால் தான் பிரசாரத்திற்கு பணம் ஏதும் வாங்கவில்லை என்கிறார் வடிவேலு.



7)கவிதை..



கறை நல்லது

ஆட்காட்டி விரலில்

வைக்கப்படும்

கறை நல்லது

கறை வைக்கச் சொல்லுங்கள்

குடிமகனின்

கடமையை ஆற்றுங்கள்

12 comments:

Chitra said...

நல்ல தொகுப்பு.

Unknown said...

கவிதையை எல்லோரும் பின்பற்றுவோம்..

சி.பி.செந்தில்குமார் said...

கறை நல்லது - விளக்கம் அழகு

goma said...

கறை நல்லதுதான் ...அக்கறையால் நல்ல பலன் கிட்டினால்....

Nagasubramanian said...

நல்ல பகிர்வு

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல வேட்பாளருக்காக கறை படுவது நல்லது....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கே.ஆர்.பி.செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Nagasubramanian

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano