Tuesday, April 5, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)


நம்ம கட்சி கொஞ்ச நஞ்சம் வெற்றி பெறுவதையும் தலைவர் கெடுத்துடுவார் போல இருக்கு

ஏன் அப்படி சொல்ற

கூட்டத்தில பேசும்போது எல்லா இடத்திலேயும் 'இந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள்'னு பேசறாரே!



2)தலைவர் தான் பெரிய தியாகம் பண்ணியிருக்கேன்னு பேசறாரே..முன்னால ஜெயிலுக்குப் போய் இருக்காரா

அதெல்லாம் இல்லை..கூட்டணியில கொடுத்த தொகுதியில ஒன்னை குறைச்சுக்கிட்டு..அந்தத் தொகுதியை தியாகம் பண்ணிட்டாராம்



3)மக்கள் சந்தோஷப்படற மாதிரி ஏதாவது பேசுங்கன்னு கட்சி பேச்சாளர்களுக்கு சொன்னது தப்பாப் போச்சு..

ஏன்

நம்ம கட்சி ஜெயிச்சு வந்தா தலைவர் முதல்வராக மாட்டார்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க



4)இதற்கு முன்னால் ஆண்ட அரசு வரலாறு காணா வகையில் ஊழல் செய்திருக்கிறார்கள்..அதை முறியடிக்க இம்முறை எங்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்



5)தலைவர் ஆனாலும் ரொம்ப மோசம்..

என்ன சொல்ற

வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால்..அனைத்து வாக்காளர்களுக்கும் ஒரு கிராமம் இலவசம்னு அறிவிச்சிருக்கார்



6)தலைவர் பிரச்சாரம் முடிஞ்சு இரவு தண்ணீலே மிதப்பாராமே

ஊர் ஊரா சுத்து..வேர்த்து விறுவிறுத்து இருப்பதால் அரைமணி நேரம் குளிர்ந்த தண்ணீலே குளிப்பார்.அதைத்தான் இப்படிச் சொல்றாங்க



7)தலைவர் கச்சத்தீவை மீட்போம் என்று சொல்லாமல் கச்சையை மீட்போம்னு பேசறார்



8)தலைவா..கட்சி ஆஃபீஸ்ல வாக்காளருக்குக் கொடுக்க வைச்சிருந்த கோடிக்கணக்கான பணத்தை ஒருத்தன் நேற்று கொள்ளை அடிச்சுட்டான்..

இரைந்து பேசாதே..நான் தான் வந்து எடுத்துட்டு போயிட்டேன்..தேர்தல் ஆணையம் ரெய்டுக்கு வரப்போறதா செய்தி வந்தது
 

16 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால்..அனைத்து வாக்காளர்களுக்கும் ஒரு கிராமம் இலவசம்னு அறிவிச்சிருக்கார்

டாப் ஜோக்

பொ.முருகன் said...

தொண்டர் :தலைவரே இப்ப நீங்க நிக்கிறது பாதுக்காப்பானா தொகுதிதானா.

தலைவர் : கண்டிப்பா,தூக்கத்துல நடக்கிற வியாதியால பலவருசமா இந்ததொகுதியில ராசுத்தியிருக்கிறேன்,ஒரு தடவ கூட அடிப்பட்டதுக்கிடையாது.

பொ.முருகன் said...

தொண்டர் :தலைவரே இப்ப நீங்க நிக்கிறது பாதுக்காப்பானா தொகுதிதானா.

தலைவர் : கண்டிப்பா,தூக்கத்துல நடக்கிற வியாதியால பலவருசமா இந்ததொகுதியில ராசுத்தியிருக்கிறேன்,ஒரு தடவ கூட அடிப்பட்டதுக்கிடையாது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா..ஹா....ஹா... சிரிச்சாச்சு...

சிநேகிதன் அக்பர் said...

நல்ல சிரிப்பு. ஆனால் இவை அனைத்துமே உண்மையாக இருப்பதுதான் வேதனை

MANO நாஞ்சில் மனோ said...

//மக்கள் சந்தோஷப்படற மாதிரி ஏதாவது பேசுங்கன்னு கட்சி பேச்சாளர்களுக்கு சொன்னது தப்பாப் போச்சு..

ஏன்

நம்ம கட்சி ஜெயிச்சு வந்தா தலைவர் முதல்வராக மாட்டார்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க//

அப்பிடி போடு அருவாளை....

MANO நாஞ்சில் மனோ said...

//மக்கள் சந்தோஷப்படற மாதிரி ஏதாவது பேசுங்கன்னு கட்சி பேச்சாளர்களுக்கு சொன்னது தப்பாப் போச்சு..

ஏன்

நம்ம கட்சி ஜெயிச்சு வந்தா தலைவர் முதல்வராக மாட்டார்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க//

அப்பிடி போடு அருவாளை....

vasu balaji said...

4 டாப்பு:)))

ஷர்புதீன் said...

இந்த ஜோக்குகளை வருகின்ற வெள்ளிநிலா இதழுக்கு பயன்படுத்தி கொள்கிறேன் ! அனுமத் உண்டுங்களா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி B.murugan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prakash

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஷர்ஃபுதீன்
தாராளமாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்