Friday, September 30, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(30-9-11)




1)நோபல் பரிசு,மகசேசே விருது,பாரத ரத்னா  ஆகிய மூன்று விருதுகளைப் பெற்ற ஒரே நபர் அன்னை தெரஸா ஆவார்.

2)விருதுகள் பற்றி நினைக்கையில் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை..
 எம்.ஜி.ஆர்.,கமல்,விக்ரம்,தனுஷ்..இந்த நால்வர் பட்டியலில் சிவாஜியின் பெயர் இல்லை..ஆம்..தேசிய விருது நடிகர் திலகத்திற்கு தரப்படவில்லை.கமல் மூன்று முறையும்..மற்ற மூவரும் தலா ஒருமுறையும் தேசிய விருது பெற்றுள்ளனர்.

3)1912ஆம் ஆண்டு தமது 26ஆம் வயதில் மருத்துவர் பட்டம் பெற்ற தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்

4)மறதி நோய் (அல்சைமர்) மேலை நாடுகளில் அதிகம் காணப்பட்டு வந்தது.ஆனால் சமீப காலமாக அது இந்தியாவிலும் பரவி வருகிறது.இந்திய ஜனத்தொகையில் 7 கோடிகலுக்கு மேல் 60 வயதைக் கடந்தவர்கள்.இவர்களில் 21 லட்சம் பேர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5)யார் வேண்டுமானாலும் கோபமடையலாம்
 அது மிகச் சுலபம்
  ஆனால்..சரியான நபரிடம்
  சரியான அளவில்
 சரியான காரணத்திற்காக
 சரியான முறையில்
 கோபப்படுவதற்கு
 எல்லோராலும் முடியாது
 அது சுலபமல்ல -   இப்படிச் சொன்னவர் அரிஸ்டாட்டில்

6)நீதி மன்றங்களில் வழக்குகள் குவிந்து வருகின்றன...தேவையே இல்லாது..தான் சார்ந்த கட்சித் தலைமையிடம் நற் பெயர் வாங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் இன்று பல வழக்குகள் பதிவாகின்றன..
இவற்றினால்...நீதிபதிகளுக்கு சுமை அதிகரிக்கிறது..
சரியான முகாந்திரம் இல்லாமல் வழக்குகள் போடப்படுமேயாயின்..அம்மனுதாருக்கு அபராதம் மட்டுமல்ல குறைந்த பட்ச தண்டனையும் வழங்கப்பட வேண்டும்..
இது ஒன்றே ..வேண்டாத வழக்குகளை தவிர்க்கும் எனத் தோன்றுகிறது

7)விளம்பரம் பொய் எனத் தெரிந்தும் பெண்கள் வாங்கும் பொருள் என்ன தெரியுமா?
  உபயோகித்தால் விரைவில் சிவப்பாய் அழகான முகத்தைப் பெறலாம் என்று விற்கப்படும் ஃபேர்னஸ் கிரீம்கள்


2 comments:

aotspr said...

உங்கள் செய்தி தொகுப்புகள் அனைத்தும் சூப்பர்........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Kannan