Sunday, September 25, 2011

சோம்பித் திரிய வேண்டாம்..



சோம்பல்..
நம் வாழ்க்கையில் பல தருணங்களில் நமக்கு ஏற்பட்டு நம்மை அறியாமலேயே பல நஷ்டங்களை நமக்கு ஏற்படுத்தக் கூடிய ஒன்று.
ஏதேனும் காரியத்தை முடிக்க வேண்டுமென்றால் ..அதை நாளைக்கு முடிக்கலாமே என்ற எண்ணமே சோம்பலின் முதல் படி.பின் நாளை..நாளை என அவ்வேலையை தள்ளிப்போடச் செய்து நமக்கு பேரிழைப்பை ஏற்படுத்தி விடும்.
இன்று என்பது நேற்றைய நாளை....அதை ஞாபகம் வையுங்கள் போதும்.
ஏதேனும் இடத்திற்கு 9.30க்கு போகவேண்டுமாயின், அவ்விடத்திற்கு 9.20க்கே செல்லுங்கள்.9.40க்கு செல்லாதீர்கள்.நேரம் தவறாமை வாழ்வில் பல நல்லவற்றை நமக்கு நாளாவட்டத்தில் தரும்.
சோம்பேறிகள் கூறும் அடுத்த வார்த்தை..எனக்கு அதிர்ஷ்டமில்லை..அதனால் பதவி உயர்வு கிடைக்கவில்லை..
நீங்கள் சொல்லும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்..
எப்போது...
அன்றன்று வேலைகளை அன்றன்று முடித்து..தாமதம் இல்லாமல் அலுவலகத்தில் பணியாற்றினால்..

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

வாழ வழியில்லை என அலுத்துக் கொண்டு முயற்சியின்றி சோம்பித் திரிவாரைக் கண்டு..பூமித்தாய் சிரிப்பாளாம்..(அடேய்..மக்கு..ஒவ்வொருவரும் வாழ இயற்கையாகிய நான் எவ்வளவு வழிகளைக் காட்டியுள்ளேன் என்று)

கெட்டுப்போக வேண்டும் என எண்ணுபவரா நீங்கள்..அப்போது..காலம் தாழ்த்துதல்,மறதி,சோம்பல்,எப்போதும் தூக்கம் ஆகியவையே போதும்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்


6 comments:

இராஜராஜேஸ்வரி said...

வாழ வழியில்லை என அலுத்துக் கொண்டு முயற்சியின்றி சோம்பித் திரிவாரைக் கண்டு..பூமித்தாய் சிரிப்பாளாம்../

அருமையான சுறுசுறுப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

aotspr said...

மிகவும் அருமையான பதிவு.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி