Sunday, February 12, 2012

விஜய்காந்தை பாராட்டும் அதிமுகவினர்...




சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்த் நாக்குத் துருத்தலுக்கு பிறகு ஜெ திராணி இருந்தால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் தனித்து நில்லுங்கள் என்றும்..மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்பட்டதும்...தொண்டர்கள் போஸ்டர் யுத்தம் ஆரம்பித்துவிட்டனர்.

இதில் ஒரு குழுவினர் விஜய்காந்த் வீட்டருகே வைத்த போஸ்டர் இது.




ஆத்திரப்பட்டால் காரியம் சிதறும் என்பது எவ்வளவு உண்மை.தேமுதிக எம் எல் ஏ க்கள் திருடர்கள் என்று சொல்ல ஆசைப்பட்டு..விஜய்காந்தை அந்த திருடர்களை அழிக்கும் நல்லவனான அலிபாபா உடன் ஒப்பிட்டுள்ளனர்.

ஆம் ..அலிபாபா நல்லவன்...திருடர்களை அழித்தவன்..தான தருமங்கள் செய்தவன்..அது போலத்தான் விஜய்காந்த் என்பதை அதிமுக வினர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்கிறார் ஒரு தேமுதிக தொண்டர்.
   

2 comments:

aotspr said...

எல்லாம் அரசியல் 


"உங்கள் தகவலுக்கு நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி kannan