Friday, February 10, 2012

அடப் பாவிகளா..எப்படியெல்லாம் ஏமாத்தறீங்க..



உத்தர பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் வேளையில்..அங்கு பெருவாரியான இஸ்லாமியர் இருப்பதால் அவர்கள் வாக்குகளைப் பெற..எப்படியான தகடுதத்தங்கள் காங்கிரஸ் நடத்துகிறது..

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முதலில் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடாக ஒன்பது விழுக்காடு ஒதுக்கப்படும் என்றார்.அவரது இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்..இப்போது புதிதாக தில்லி ஜாமியா நகரில் நடைபெற்ற எங்கவுண்டரில் 2 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து சோனியா காந்தி கண்ணீர் விட்டு அழுதார் என புதுக் கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார்,மேலும் இது சம்பந்தமாக முழு விசாரணை நடத்த உத்தரவிட்டார் (சோனியா எந்த அதிகாரத்தில் உத்தரவிட்டார்?) என்றும் கூறியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சை காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் மறுத்துள்ளார். சோனியா காந்தி அழவில்லை என்றுள்ளார்.

டிஸ்கி -அவர் ஏன் அழப் போகிறார்...கொத்து கொத்தாய் இலங்கை தமிழர்கள் கொன்று வீழ்ந்த போதே வாயை மூடிக் கொண்டு தானே இருந்தார்.

FLASH NEWS

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சல்மான் குர்ஷித் அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

ஆனால் இதை சல்மான் குர்ஷித் நிராகரித்து பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத்தில் பேசிய சல்மான், சிறுபான்மையினர் உரிமை தொடர்பாக பேசுவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. சிறுபான்மையினரது உரிமை பற்றி பேசினால் எனக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். சிறுபான்மை ஆதரவு நிலைப்பாட்டிற்காக என்னை தூக்கில் வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.


5 comments:

aotspr said...

அரசியல் வாழ்கையில் இதெல்லாம் சகஜமப்பா.....சாதாரணமப்பா..


"நன்றி,

கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

T.V.ராதாகிருஷ்ணன் said...

"நன்றி",கண்ணன்

ஹேமா said...

அவர் அழுதிருந்தா நாங்க எங்க அழுகையைக் கொஞ்சம் குறைச்சிருப்போமில்ல !

T.V.ராதாகிருஷ்ணன் said...

"நன்றி" ஹேமா

Unknown said...

என்ன கொடும சார் இது!!!