Tuesday, August 12, 2014

குறுந்தொகை - 75



தலைவி கூற்று
(தலைவனது வரவைப் பாணனால் அறிந்த தலைவி, "நீ பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக" என்று வாழ்த்தியது.)

மருதம் திணை -பாடலாசிரியர் மோசிகீரனார்

இனி பாடல்-

 
நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ
   
ஒன்று தெளிய நசையின மொழிமோ
   
வெண்கோட் டியானை சோணை படியும்
   
பொன்மலி பாடலி பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

                        -மோசிகீரனார்

உரை-

தலைவனது வரவை நீ கண்டாயோ? அல்லது தலைவனை கண்டறிந்தவர் சொல்ல கேட்டறிந்தாயா? அப்படி பிறர் சொல்லி கேட்டிருப்பாயின் யார் சொல்லி கேட்டாய்? உண்மையாக ஒன்றை அறிய விரும்புகிறோம். சொல்வாயாக. சொன்னால்...வெள்ளிய கொம்பையுடைய யானைகள் சோணையாற்றில் துளைந்து விளையாடும் பொன் மிக்க பாடலிபுத்திர நகரத்தை பெறுவாயாக!


(கருத்து) தலைவர் வரவை உரைத்த நினக்குச் செல்வம் பெருகுவதாகுக,

தலைவன் வரவை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில், அவன் வந்திருக்கிறான் என தூதன் வாயிலாகக் கேட்டவள்..தலைவன் வரவை நீ பார்த்தாயா/ அல்லது யார் சொல்லியாவது கேட்டாயா? அப்படி யாரேனும் சொல்லியிருந்தால் அது யார்? சொல்வது உண்மையானால் பாடலிபுத்திர நகரையே பரிசலிப்பேன் என்கிறாள் தலைவி.

 

1 comment:

Culinary wonder said...

தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இணையத்தளம்
http://omtamil.tv/patriyam/