Sunday, August 17, 2014

குறுந்தொகை - 80


விலைமகள் கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட விலைமகள் அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஔவையார்

.  
கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப்
 
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
 
யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ
 
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர

நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி
 
முனையான் பெருநிரை போலக்
 
கிளையொடுங் காக்கன் கொழுநன் மார்பே.

                         =ஔவையார்



உரை_

எனது கூந்தலில் ஆம்பலின் புறவிதழொடித்த முழுப்பூவைச் செருகி, வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி, அப்புனல்
 விளையாட்டை விளையாடச் செல்வோம்.நான் அப்படி ய்தலைவனுடன் விளையாட தலைவி அஞ்சுவாளானால், வெவ்விய போரில்
பகைவரை நடுநிலை உண்டாகுமாறு பயப்படாமல் எதிரில் நின்று கொல்லும் பல வேற்படையையுடைய எழுனி என்னும் உபகாரியின் போர்முனையிடத்தேயுள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப் போல தன் கணவர் மார்பை பாதுகாக்கட்டும்  

(தலைவன் என்னை விட்டு வரமாட்டான் என விலைமகள் நம்பிக்கையுடன் கூறுகிறாள்)



     (கருத்து) தலைவன் என்னுடைய விருப்பப்படித்தான் நடப்பான்..தலைவி விரும்பியபடி நடக்கமாட்டான்.

எழினி - அதியமான் அஞ்சி. தன்நாட்டுப் பசுக்களைப் பகைவர் கொண்டு சென்றாராக அவரொடு பொருது அப்பசுக்களை எழினி மீட்டுக் காத்தான்;

No comments: