Friday, September 7, 2018

நாடகப்பணியில் நான் - 51



எனது 'சொல்லக் கொதிக்குது நெஞ்சம்" நாடகத்திலிருந்து சில வசனங்களை அடுத்த பதிவில் எழுதுவதாகச் சொன்னேன் அல்லவா..அவை கீழே

1) ஒரு காலத்திலெ, இந்தக் காவிரி நதியும், பச்சைப் பசேல்னு மரகத நிறத்திலே விளைகிற நெற்பயிரும்..இந்த அம்மன் கோயிலும்..மாசுபடாத காற்றும்..பறவைகளின் சப்தமும்..கிராமம்னா..இந்த அல்லிக்கேணி கிராமம்தான்னு அழகாயிருந்தது.இப்பவெல்லாம் நம்ம குடிதண்ணீருக்கே திண்டாட வேண்டியிருக்கு


2)பண்ணையாரிடம் அர்ச்சகர் -  ஏரு போட்டு உழறது, விதைக்கிறது,கதிரடிக்கிறது இப்படியெல்லாமே  செய்யப்போறது மூக்கன் தான்.ஆனா, அவனை மட்டும் உங்கக் கூட விதை விதைக்கும் பூஜைக்கு சமமாக வரக்கூடாதுன்னு சொல்றது எந்த விதத்திலே நியாயம்னு சொல்லுங்க.உண்மையைச் சொல்லணும்னா மூக்கன் மாதிரி ஆளுங்கதான் உங்களைப் போன்றவங்களுக்கு எஜமானன்,உங்க எஜமானர்கள்தான் உங்களுக்காக உழுகிறார்கள், விதிக்கிறார்கள், அறுவடை செய்கிறார்கள்

3) மூக்கனை அர்ச்சகர் தொட்டுவிட
மூக்கன் _ (அதிர்ச்சியுடன்) சாமி...
 அர்ச்சகர் - என்னடா..உன்னைத் தொட்டுட்டேனா..ஏன் நான் தொட்டா என்ன.நீயும் நானும் சமம்டா.எங்களுக்கு ஊருக்கு புறம்பா அக்ரஹாரம்.உங்களுக்கு ஊருக்கு புறம்பா சேரி.நீங்க இருக்கிற இடத்துக்கு நாங்க வரக்கூடாது.நாங்க இருக்கிற இடத்துக்கு நீங்க வரக்கூடாது.சுப, அசுப காரியங்களை பறை கொட்டி நீங்க தெரிவிப்பீங்க.நாங்க அதை நடத்தி வைப்போம்.எங்களுக்கு பூணூல் உண்டு.உங்களில் சில பிரிவினருக்கும் பூணூல் உண்டு. மடிசார் கட்டறேன்னு எங்க பெண்கள் புடவைத் தலைப்பை வலது பக்கம் போடுவாங்க.உங்களைச் சார்ந்த பெண்களுக்கும் வலது பக்கம் தான் தலைப்பு.நம்ம இரண்டுபேரை வைச்சுதான் அரசியல் கட்சிகள் விளையாடுது..உன்னை நான் தாராளமா தொடலாம்

(மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்)

No comments: