Saturday, September 15, 2018

நாடகப்பணியில் நான் - 59

"கருப்பு ஆடுகள்" நாடகம் எனக்கு மாபெரும் வெற்றி நாடகமாக அமைந்ததுடன், மைலாப்பூர் அகடெமியினரால் 'சிறந்த ஆல்ரவுண்டர்" என்ற விருதினையும் பெற்று தந்தது.

அடுத்த என் நாடகம்..ஒரு திரில்லர்..

இரண்டே பாத்திரங்கள்..

இதை வைத்து என்ன திரில்லர் என்கிறீர்களா?  இருவரும் ஒருவரை ஒருவர் கொல்லப் பார்க்கின்றனர்.அதில் வெல்வது யார்? என்பதே நாடகம்.

இது போன்ற நாடகங்களை வடுவூர் துரைசாமி ஐயங்கார் பாணி எனலாம்.மிக்க படித்தவர்கள் ஹிட்ச்காக் பாணி என்றும் சொல்வர்

ஆம்..அவர் நாவல்கள் முதலிலேயே குற்றவாளியினை சொல்லிவிடும்.பின், அதை எப்படி நிரூபிக்கிறார்கள்? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லுவார்.

உதாரணமாக, "திகம்பர சாமியார்" என்ற படத்தைச் சொல்லலாம்.

சரி...என் நாடகத்திற்கு வருகிறேன்...திரில்லர் என்றேன் பெயரைச் சொல்லவில்லை அல்லவா?

அந்நாடகம் "மழையுதிர் காலம்"

ரமேஷ், ஜெயசூர்யா ஆகியோர் நடித்தனர்.இந்நிலையில், எங்களது நிரந்தர நடிகரான கரூர் ரங்கராஜனுக்கான நடிக்கும் வாய்ப்பு இதில் இல்லை..என்பதால்..அவருக்காக பத்திரிகை ஆசிரியர் என்ற பாத்திரத்தை இணைத்தேன்..

இப்போது இந்நாடகம் மூவர் நடிக்கும் நாடகமாக அமைந்தது.இவர்களுடன்..இடி, மின்னல், மழை, இசை , அரங்க அமைப்பு ஆகியவையும் தன் பங்கினை சிறப்புடன் ஆற்ற நாடகம் மாபெரும் வெற்றி.

ரமேஷ்...கண்ணில்லாதவராகவும், ஃபிளாஷ்பேக்கில் கண்ணுள்ளராகவும் மாறி மாறி வந்தாலும்..மறக்காமல் பாத்திரத்திற்கேற்றாற்போல மாறி பாராட்டினைப் பெற்றார்.

இசை, ஒளி அமைப்பிற்கான விருதினையும், சிறந்த நாடக ஆசிரியனுக்கான விருதினையும் பெற்று தந்த நாடகம்.

தனிப்பட்ட முறையில் நாரத கான சபாவின் காரியதரிசியாக இருந்த அமரர் கிருஷ்ணசாமி அவர்கள் என்னை பாராட்டியதை என்னால் மறக்க இயலாது  

No comments: