Tuesday, September 11, 2018

நாடகபப்ணியில் நான் - 55





"என்று தணியும்" நாடக வெற்றிக்குப் பிறகு, அடுத்த நாடகம் குறித்து யோசித்தோம்.

பாரத ரத்னா, ஒரு ஆசிரியரின் கதை

சொல்லக் கொதிக்குது நெஞ்சம்..ஒரு கிராமத்தின் இன்றைய நிலை..தண்ணீர் பிரச்னை, காவிரி பிரச்னை, தீண்டாமை ஒழிப்பு என அனைத்தையும் சொன்னோம்

அடுத்து, "என்று தணியும்" மருத்துவம் படிக்க நினைக்கும் முற்பட்ட பிரிவினரும் சரி, பிற்படுத்தப்பட்டொரும் சரி படும் வேதனைகளைச் சொன்னோம்

அடுத்து..நாம் ஏன் ஒரு political satire செய்யக்கூடாது?என நினைத்தேன்.

அப்போது புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமியும்" சிறுகதை ஞாபகத்தில் வந்தது.

அதுபோலவே, இறைவன் தானே வந்து அரசியலில் ஈடுபட்டால் என்ன ஆகும்? என்பதை அன்றைய அரசியலுடன் கலந்து மக்கள் ரசிக்கும் படி செய்தோம்.

அந்த நாடகம் ."மாண்புமிகு நந்திவர்மன்"

அதே நாடகத்தை இந்த பத்து வருட அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து மீண்டும் வருகின்ற அக்டோபர் 4ஆம் நாள் அரங்கேற்றம் செய்கிறோம்.

அன்று.."நந்திவர்மனாக" நான் நடித்தேன்.
இப்போது அரங்கேறும் நாடகத்தில் அப்பாத்திரத்தை எங்கள் குழுவின் ஆஸ்தான நடிகர் பி டி ரமேஷ் செய்கிறார்.

அவருடன் கிரீஷ் வெங்கட், அம்பி ராகவன், சுரேஷ்,சுந்தர்,ஸ்ரீனிவாசன் ஆகியோரும் இணைகின்றனர்.

ஆனால்  நான்...

நான் இல்லாமலா.அன்று கரூர் ரங்கராஜ் ஏற்ற பாத்திரத்தை இன்று நான் ஏற்கின்றேன்


No comments: