"நூல் வேலி" நாடகத்தின் வெற்றிக்கு அடுத்து, நான் மேடையேற்றிய நாடகம் "என்றும் அன்புடன்"
மகன் மீது ஆயிரம் மடங்கு அன்பை மனதினுள் வைத்துக் கொண்டு எதிரியைப் போலத் தெரியும் உறவு அப்பா மட்டுமே!
உயிருடன் இருக்கும்வரை அப்பாவின் அருமையை நாம் அறிவதில்லை
அம்மாவின் பாசத்திற்கு எள்ளளவும் குறைந்ததில்லை தந்தையின் பாசம்
ஆனால் தன் உணர்வுகளை...பாசத்தை..வெளிக்கா
இது தந்தையர் வாங்கி வந்த வரமா?
மகனை வளர்க்க வாழ்வில் தந்தையரின் தியாகங்கள் அளப்பறியாது.
சமுதாயத்தில் ஒருவனுக்குக் கிடைக்கும் அந்தஸ்து, செல்வாக்கு, பணம், கௌரவம் அத்தனைக்கும் அஸ்திவாரமாய் அமையும் உழைப்பு அவன் தந்தையினுடையதே!
தனக்கென வாழாது தன் மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு தந்தையின் கதையே "என்றும் அன்புடன்"
தாயில்லாத மகன்களை வளர்க்க, இளம் வயதிலேயே மனைவியை இழந்தும் மறுமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் தந்தை.
"கடைசி காலத்தில் உங்க இருவர் கையைப் பற்றிக் கொண்டே என் உயிர் பிரிய வேண்டும் என்பவர்.
படிப்பை முடித்து, ஒரு மகன் அமெரிக்கா செல்கிறான்.மற்றொரு மகனோ ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறான்.
ஒரு கட்டத்தில், அமெரிக்க மகன் அங்கேயே ஒரு பெண்ணை மணந்து விட, தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிறான்.
மற்றொரு மகனோ தந்தையின் சொத்தை பிரித்து கேட்கிறான், தன் தொழில் முதலீட்டிற்கு.
தந்தைக்கு ஆதரவாக பேசக்கூடியவர், அவர்களின் மாமன் மட்டுமே!
மக்களின் ஆதரவைப் பெற்ற இந்நாடகம், அடுத்து அடுத்து வந்த தேதிகளால், போட முடியுமா? என்ற பிரச்னையில் இருந்தது.
அது ஏன்? அதன் பின் அந்நாடகம் போடப்பட்டதா? பிரச்னை என்ன? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
 
 
No comments:
Post a Comment