Monday, September 24, 2018

நாடகப்பணியில் நான் - 69



எனது சௌம்யா குழுவிற்காக நான் எழுதி அரங்கேறிய நாடகம் "நூல் வேலி"

வேலியே பயிரை மேயும் கதை.

சமுதாயத்தில் தனது ஆசைக்கு இணங்காத பெண்கள் மீது Acid கொட்டப்பட்டு, அப்பெண்களின் உடலும், உறுப்புகளும் சிதைக்கப்பட்டு..உருக்குலைந்து வாழ்நாள் முழுதும் ரணவேதனைக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதுவே இந்நாடகத்தின் மையக்கருவாய் எடுத்துக் கொண்டேன்

ஒரு ஏழை விவசாயி.அவனுக்கு ஒரே மகள்.கஷ்டப்பட்டு அவளை மருத்துவம் படிக்க வைக்கின்றான்.
அந்த விவசாயி கட்சி ஒன்றின் ஆதரவாளனாய் இருக்கின்றான்.அக்கட்சித் தலைவன் ஒருநாள் அவன் வீட்டிற்கு விஜயம் செய்கிறான். அவளின் மகளைப் பார்த்து மையல் கொள்கிறான்.

அவளை ஒருநாள் யாரும் இல்லாத நேரம் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவள் முகத்தில் acid ஐ கொட்டி சிதைத்து விடுகிறான். அவளும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைகிறாள்.

அந்த அரசியல்வாதிக்கு அதற்கான தண்டனைக் கிடைத்ததா? என்பதே  முடிவு.

அரசியல்வாதியாக நானும், விவசாயியாக பி டி ரமேஷூம், அவனது மகளாக ராஜஸ்ரீ பட்டும் நடிக்க , நாடகம் வெற்றி நாடகமாக அமைந்தது.

அடுத்த பதிவில் இந்நாடக வசனங்கள் சில.   

No comments: