Saturday, September 8, 2018

நாடகப்பணியில் நான் - 52



"சொல்லக் கொதிக்குது நெஞ்சம்" நாடகத்திலிருந்து மேலும் சில வசனங்கள்

1)அர்ச்சகர் - இன்னிக்கு பிராமணர்களும் சரி, தலித் மக்களும் சரி..தங்களைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் நிலையிலேதான் இருக்காங்க.என்ன ஒன்னு...பிராமணர்கள் என்னிக்கும் கோஷம் போட்டதோ...கொடி பிடித்ததோ கிடையாது.ஏன்னா அவங்க அவமானத்தைத் தாங்கிக்க பழைகிட்டாங்க.ஆனா..அது பூமராங்கா..அவமானப்படுத்தினவங்களையே திரும்பத் தாக்கும்னு மறந்துட்டாங்க.

2) ராமன்- இன்னிக்கு ஏதாவது நல்லது நடக்குதுன்னு வைச்சுக்கங்க..என்னோட மகிழ்ச்சியை எப்படிக் கொண்டாடறதுன்னு கேட்டா..இவங்க எல்லாம் அந்த ஆண்டவனுக்கு தங்கக் கவசம் போடலாம்னு சொல்லுவாங்க.ஆனால் நானோ...நாம கண்ணால பார்க்காத ஆண்டவனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்.அதுக்கு பதிலாக எழை மக்களுக்கு உதவி செய்தா போதும்னு சொல்லுவேன்.உடனே இவங்க என்னை நாத்திகவாதின்னு சொல்லிடுவாங்க

3)அர்ச்சகர் - குடிக்கிற தண்ணீ..அடிப்படை உரிமைங்கற நிலைமை மாறி..அடிப்படைத் தேவைங்கற நிலைக்கு வந்திடுத்து.வருங்காலத்திலே ஏற்படப்போகும் தண்ணீர் பஞ்சம்..மூன்றாம் உலகப் போரைக்கூட உண்டாக்கும்னு அறிக்கைகள் சொல்லுது

4)ராமன்- விவசாயி விளைவிக்கிற ஒவ்வொரு நெல்முத்துக்களும்..அவனோட வியர்வையில முளைச்ச முத்துக்கள்னு இந்த பட்டணத்து ஜனங்களுக்குப் புரியணும்.பொங்கல் அன்னிக்கு குக்கர் பொங்கல் வைச்சு..சூரியனை வணங்கறோம்னு சொல்லிட்டு சாமிமேல ஒரு கண்ணும், டிவி யிலே ஒரு கண்ணும் வைக்கிற மக்கள்..இது உழவர் திருநாள்..அந்த உழவன் வாழ்வு செழிக்கணும்னு வேண்டிக்கலாம் இல்லையா

(வசனங்கள் தொடரும்)

No comments: