Saturday, September 22, 2018

நாடகப்பணியில் நான் - 67

"சாலையோரப் பூக்கள்" நாடகத்திலிருந்து சில வசனங்கள்

1) பொய் சொல்லாத பொழைப்பு ஆசிரியர் தொழில் தான்.உலகம் முழுதும் நாலும், மூணும் ஏழுதான்.ஆறுன்னு சொல்லிக் கொடுக்க முடியாது.இந்தியாவின் தலைநகரம் டெல்லிதான் மும்பைன்னு சொல்லிக் கொடுக்க முடியாது.

2)பிரச்னைகள்ங்கறதை நாமே உருவாக்கிக் கொள்வதுதான்.நமக்கு ஒரு பிரச்னை வந்தா , முதல்லே கொஞ்சம் யோசனைப் பண்ணனும்.அப்பத்தான் அதற்கானத்
தீர்ப்பும் நம்ம கிட்டேயே இருக்குன்னும் தெரியும்

3)அப்பாவோட மனசு கல்லுக்குள் ஈரம் போல.எங்கே அந்த ஈரம் வெளிப்பட்டா குழந்தைகள் பாதை மாறிப் போயிடுவாங்களோன்னு தன்னை வெறும் கல்லாவே காட்டிகிறாங்க.அப்பாவோட அருமை அப்பா செத்தாத்தான் தெரியும்னு சொல்லுவாங்க

4)உண்மையைச் சொல்லணும்னா வாடகைத் தாய்னு சொல்றது கூட தப்புதான்.அம்மாவிற்கு பதிலான தாய் என்பதே சரி.surrogate motherனா என்ன அர்த்தம் தெரியுமா? substitute ..அதுதான் உண்மையான அர்த்தம். கிரிக்கெட் மேட்ச்ல 12த் மேன்னு ஒருத்தன் இருப்பான்.விளையாடற 11 பிளேயர்ஸ்ல யாருக்காவது காயம் ஏற்பட்டா அவனுக்கு ஃபீல்டிங் மட்டுமே செய்ய அனுமதி.அவனால bat paண்ணமுடியாது. ஏன்னா அவன் substitute.. அதுபோல நானும் உங்கக் குழந்தைக்கு substitute அம்மாவா இருக்கேன்.உங்கக் கூட எல்லாம் சேர்ந்து வாழ அனுமதி இல்லை.Yes, I am also Like the 12th man.ஆனா team playersக்கு கிடைக்கிற benefit எல்லாமே அவனுக்குக் கிடைக்கும் அதுபோல உங்களுக்குக் கிடைக்கிற ஆதாயத்திலே எனக்கும் பங்கு வேண்டும்

5) உலகத்திலேயே இருக்கிற உறவுகள்ல உன்னத உறவு பெத்தெடுத்த தாய் தான்டா.ஒரு தாய் தன் குருவில் அந்த சிசுவிற்கு தன் உதிரத்தைக் கொடுக்கிறா.பிறந்ததும் சிசுவோட தொப்புள் கொடியைத்தான் மருத்துவர்களால் கட் பண்ண முடியும்.தொப்புள் கொடி உறவை முடியாதுடா

6) உலகத்திலேயே சிறந்தது தாய்மை.அந்தத் தாய்மையையே பிற குடும்பங்களின் மகிழ்ச்சிக்காக தியாகம் பண்ணும் வாடகைத் தாய்மார்களுக்கு இந்நாடகம் சமர்ப்பணம் 

நாடகத்தில் தொழில் அதிபராக ரவிக்குமாரும், வாடகைத் தாய், மற்றும் அவள் மகள் ஆகிய இரு வேடங்களில் ராஜஸ்ரீ பட்டும் வந்து அமர்க்களப்படுத்துவார்கள். 

No comments: