Friday, September 28, 2018

நாடகப்பணியில் நான் - 72



இந்த பதிவு சற்றே மாறுபட்ட பதிவு..

ஆம்...நாடகப்பணியில் அமெச்சூர் நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்படும் அமரர் திரு ஒய் ஜி பார்த்தசாரதி ,மற்றும் பத்மநாபன் எனும் பட்டு அவர்களால் 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் குழு கடந்த 66 ஆண்டுகளில் 67 நாடகங்களை அரங்கேற்றி..ஏறக்குறைய 10000 முறை மேடையேறி சாதனை புரிந்துகொண்டிருக்கிறது
இது மாபெரும் சாதனை.
இக்குழுவில், ஜெயலலிதா, சோ,சந்தியா, வித்தியாவதி, ருக்மணி, லட்சுமி,ஐஸ்வர்யா, ஏ ஆர் எஸ்.,விசு, மௌலி, ராதாரவி, வரதராஜன்,மதுவந்தி
என் பலர் நடித்து பின்னாளில் பிரபலமானார்கள்

அக்குழுவின் சாதனைகளை ஆவணப்படுத்த வேண்டும் என நானும், யூ ஏ ஏ வின் இன்றைய தயாரிப்பாலர் ஒய் ஜி மகேந்திரனும் விரும்பினோம்.

அதன் மூலம் பிறந்ததே "யூஏஏ எனும் ஆலமரம்" என்ற நூல்.

இந்நூலில், 67 நாடகங்கள் பற்றியும், ஆரம்பகால யூஏஏ வில் ஒய்ஜிபியின் உழைப்பு, திருமதி ஒய்ஜிபி யின் பக்கபலம்,
ஆகிய அனைத்தையும் எழுதியுள்ளேன். 

அடுத்துவரும் தலைமுறையினர்களுக்கு ஒய்ஜிபி பற்றி தெரிய வேண்டும் என்ற அவா இதன் மூலம் நிறைவேறும் என எண்ணுகிறோம்.

வானதி பதிப்பகம் மூலம் வெளியாகும் இந்நூலை நாளை (30-9-18)காலை 10-30 மணியளவில் திரு நல்லி செட்டியார் முன்னிலையில் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் வெளியிடுகிறார்.

திருமதி ஒய்ஜிபி, ஏ ஆர் எஸ், லட்சுமி, விசு, மௌலி, கே எஸ் நாகராஜன், எஸ் வி சேகர், காத்தாடி ராமமூர்த்தி, மாது பாலாஜி,கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ராஜகோபால்சேகர்,தியாக பிரம்ம கான சபா தலைவர் டெக்கான் மூர்த்தி ஆகியோர் முன்னிலை

ஒரு நாடகக்குழுவினைச் சேர்ந்த நான் மற்றொரு நாடகக்குழுவின் சாதனைகளை நூலாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்

வானதி ராமநாதனுக்கும், இந்நூல் வெளிவர உதவிய அருமை நண்பன் ஒய் ஜி மகேந்திரனுக்கு எனது நன்றிகள்

நூல் வெளியீட்டு விழாவில், என் நாடக நண்பர்கள், என் நலம் விரும்பும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்  

No comments: