Friday, September 14, 2018

நாடகப்பணியில் நான் - 58



அடுத்து 2011ல் அரங்கேறிய நாடகம் "கருப்பு ஆடுகள்"

ஒரு தீவிரவாதி எப்படி உருவாகிறான் என்பதைச் சொன்ன நாடகம்

தன் கண்முன்னாலேயே நடக்கும் ஊழல் அதற்கு பலிகடா ஆனவன் ..அரசியல்வாதி ஒருவனைக் கொலை செய்து விட்டு, அவர்களின் அடையாளம் தெரியா தலைவனின் கட்டளைப்படி ஒரு மருத்துவரின் வீட்டினுள் கால் அடிபட்டு அராஜகமாக நுழைந்து விடுகிறான்.

அவனின் கதையைக் கேட்டு அவனை காவல்துறையில் மாட்டிவிட மனமின்றி வைத்தியம் பார்க்கிறார் மருத்துவர்.

இதனிடையே, அவன் அங்கே தங்கியிருப்பது காவல் துறைக்குத் தெரிய வர, அவர்கள் அங்கு வந்து அவனை கைது செய்தார்களா?

அவன் ஈடுபட்டிருந்த தீவிரவாதி இயக்கம், உண்மையிலேயே தீவிரவாதிகள் இயக்கமா?

அவர்களின் தலைவன் யார்?

என்பதையெல்லாம் சுவைப் பட சொன்ன நாடகம்

இந்த நாடகத்தில் நடித்த ஜெயசூர்யா சிறந்த நாடக நடிகனுக்கான விருதினைப் பெற்றார்

சிறந்த நாடக ஆசிரியருக்கான விருதினை நான் பெற்றேன்.

நீதிபதிகளாக இருந்து இவ்விருதிற்கு எங்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் "முத்ரா" பாஸ்கரும், பிரியா கிஷோரும்.

தவிர்த்து இந்நாடகத்திற்கு 95 மதிப்பெண்கள்  தனது விமர்சனம் மூலம் அளித்து என்னை கௌரவித்தார் முத்ரா பாஸ்கர்.

No comments: