Tuesday, April 19, 2011

கூடுதல் வாக்குப்பதிவு..யாருக்கு சாதகம்...





1971முதல் 2006 வரை நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் சராசரியாக 60 விழுக்காடு வாக்குகளே பதிவாகி..அதில் 32 அல்லது 33 விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சிகள் ஆட்சி அமைத்து வந்திருக்கின்றன.

இந்நிலையில் 2011க்கான தேர்தலில் பெருவாரியான மாவட்டங்களில் 80 விழுக்காடுகளுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கான காரணம் என்ன..

ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன..என்று வாக்குப் பதிவு நாளன்று ஒரு நாள் விடுமுறைக் கிடைத்தது என மகிழ்ந்து வாக்களிக்காமல் இருந்த மக்கள் இம்முறை வாக்களித்துள்ளனரா?

அல்லது இலவசங்களால் மனம் மகிழ்ந்த வாக்காளர்கள் வாக்குப் பதிவு விழுக்காடை அதிகரித்துள்ளனரா?

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால்..மனம் மகிழ்ந்து..சுதந்திரமாக அதிக நேரம் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கலாம் என்று பலர் வாக்குச் சாவடி சென்றுள்ளனரா

இந்த முறை 18 வயதை அடந்த முதன் முறை வாக்காளர்கள் காரணமா?

எது எப்படியாயினும்..வாக்குப் பதிவு விழுக்காடு யாருக்கு சாதகமாக அமையும் என இரு அரசியல் கட்சிகளும் புரியாமல் விழித்து வருகின்றனர்.

நான் கடைசியாகச் சொன்ன புது வாக்காளர்கள் கணிசமாய் உயர்ந்துள்ளனர்..இவர்கள் வாக்கு...தொகுதியில் போட்டியிடும் சிறந்த வாக்காளர்களுக்கே போய்ச் சேர்ந்திருக்கும்..அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராய் இருந்தாலும் ஓகே தான்..ஆகவே இம்முறை சுயேச்சைகள் சற்று கூடுதலாய் வாக்குகள் பெற்றிருப்பர்.

'ராமன் ஆண்டால் என்ன.." வாக்குபதிவர்கள்..தங்கள் கடமையை இம்முறை கண்டிப்பாய் ஆற்றவேண்டிய நிலை இருப்பதை உணர்ந்து வாக்களித்திருப்பர்..இவர்கள் வாக்குகளை இரு திராவிடக் கட்சிகளுமே பெற்றிருக்கும்.

இலவசங்கள் ..அரசின் கடமை என்று மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டதால்..யார் வந்தாலும் இலவசங்கள் கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டதால், இம்முறை இலவச அறிவிப்புகள் குறிப்பிட்ட கட்சியின் வாக்குகளை அதிகரிக்கும் என்று தோன்றவில்லை.

கடைசியில் என்னதான் சொல்லவருகிறாய் என்கிறீர்களா..?

கூடுதல் வாக்குப்பதிவால் இரு கட்சிகளின் கூட்டணிகளுக்கும் கணிசமாய் வாக்குகள் அதிகரித்திருக்கக் கூடும்..ஆதலால்..இரு கட்சிகளுமே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்..ஆகவே ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடரும்..அப்படியே ஆட்சி அமைக்கும் கூட்டணிக்கும்..எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கும் 10 முதல் 20 வரையிலுமான அளவிலேயே மெஜாரிட்டி இருக்கும்..

இதுவரை தமிழகம் சந்தித்து இராத நிலைகள் ஏற்படக்கூடும்.

அடுத்து மக்கள் 2016 வரை அடுத்த சட்டசபத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை மாறி..அதற்கு முன்னரே சந்திக்கக் கூடும்.

இதற்கிடையே..ஆட்சி அமைக்கையில் கூட்டணி கட்சிகளும் கூட்டணி மாறலாம்.

8 comments:

Chitra said...

அடுத்து மக்கள் 2016 வரை அடுத்த சட்டசபத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை மாறி..அதற்கு முன்னரே சந்திக்கக் கூடும்.

இதற்கிடையே..ஆட்சி அமைக்கையில் கூட்டணி கட்சிகளும் கூட்டணி மாறலாம்.


......இப்போவே கண்ணை கட்டுதே.....

Unknown said...

அடுத்து ஜெயலலிதாவின் ஆட்சிதான்...

பிரபாகர் said...

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புகள் அதிகம் அய்யா!...

MANO நாஞ்சில் மனோ said...

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பிரபாகர்