Thursday, September 1, 2011

வ.உ.சி. தீவிரவாதி!- சமச்சீர் கல்விப் புத்தகத்தில் அபத்தம்


கப்பலோட்டிய தமிழன்' என்று அழைக்கப்படும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ. சிதம்பரம்பிள்ளை பற்றிய 10ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு சமூக அறிவியல் சமச்சீர் பாடப் புத்தகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதனை அறிவுறுத்திய பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனடியாக அதனை இந்த அரசு நீக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவகங்கையில் திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது சமச்சீர் கல்வியின் இந்த அபத்தத்தை தெரிவித்தார்.

தமிழக பாட திட்டத்தில், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், 101-ம் பக்கத்தில் வ.உ.சிதம்பரனார் பற்றி உள்ள பாடத்தில் பாலகங்காதர திலகரை அவர் ஆதரித்தார் என்றும், அவர் ஒரு தீவிரவாதியாக செயல்பட்டார் என்றும், தமிழகத்தில் தீவிரவாதத்தை வேகமாகப் பரப்பினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது. மேலெழுந்த வாரியாக இதைப் படிக்கும் மாணவர்கள் வ.உ.சி.யை தீவிரவாதி என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை ஏற்படும்.

சமச்சீர் கல்வியில் கடந்த அரசு செய்த தவறுகளை திருத்துவதாகக் கூறிக் கொண்டு செயல்படும் தற்போதைய அரசு இந்தத் தவறை உடனடியாகத் திருத்தி இப்பாடத்தில் ஓரிரண்டு வார்த்தைகளை புதிதாகச் சேர்த்தாலே போதும். 

விடுதலைப் போரில் வ.உ.சி. தீவிரமாக ஈடுபட்டார். விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தீவிரமாகப் பரப்பினார் என்று திருத்தினால் முழு அர்த்தமும் மாறும். இந்தத் திருத்தத்தை அரசு உடனடியாகக் கொண்டு வரவில்லை என்றால் பாஜக திருத்தம் கோரி போராடும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.


(நன்றி வெப்துனியா )

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஓ!!!

ramesh said...

its rigt it should be done

aotspr said...

மிகவும் நல்ல பகிர்வு....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com