Wednesday, June 3, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1. நம்ம அடுத்த படத்தில ஹீரோவிற்கு திருடன் வேஷம்
கதை என்ன
அதைத்தான் எந்த மொழியிலே இருந்து திருடலாம்னு யோசித்துக் கிட்டு இருக்கோம்.

2.டாக்டர் நோயாளிக்கு வலது கண்ணுக்கு பதிலா..இடது கண்ணுல ஆபரேஷன் பண்ணிட்டீங்க
அதனால் என்ன..வலது கண்ணுல தையல் பிரிச்சுடறேன்

3.அவர் படத்திலே இரட்டை வசனங்கள்னு விளம்பரப் படுத்தறாங்களே ஏன்.,
எல்லா வசனமும்..இரட்டை அர்த்த வசனங்களாம்

4.அதோ போறாரே..அவர் பின் அழகை ரசிப்பவர்
அப்படியா
ஆமாம்..கையில் கிடைக்கிற ஒரு குண்டூசியைக்கூட விடமாட்டார்

5.பாடகி பல்லவி திருமணம் முடிந்து பல வருஷம் பாடாம இருந்தவர்..இப்போ திரும்ப பாட வந்துட்டார்
இப்ப எப்படி பாடறாங்க
பழைய பல்லவியைத்தான்

6.உங்க வீட்டுக்கு வந்தா உங்க வீட்டு நாய் விடாம குரைக்குது
பயப்படாதே! குரைக்கிற நாய் கடிக்காது
அது எனக்குத் தெரியும்..உன் நாய்க்கு தெரியாதே!

15 comments:

கோவி.கண்ணன் said...

//4.அதோ போறாரே..அவர் பின் அழகை ரசிப்பவர்
அப்படியா
ஆமாம்..கையில் கிடைக்கிற ஒரு குண்டூசியைக்கூட விடமாட்டார்//

:) (அக்)குறும்பு !

*இயற்கை ராஜி* said...

அது எனக்குத் தெரியும்..உன் நாய்க்கு தெரியாதே! //

ha.hha..hhhaaaaa

வால்பையன் said...

//அவர் படத்திலே இரட்டை வசனங்கள்னு விளம்பரப் படுத்தறாங்களே ஏன்.,
எல்லா வசனமும்..இரட்டை அர்த்த வசனங்களாம்//


இதே போல்

:அந்த வசனகர்த்தா ஏன் இரட்டை சம்பளம் கேக்குறாராம்!

::எழுதியதெல்லாம் இரட்டை அர்த்த வசனமாம்!

ILA (a) இளா said...

ஐயா. ரொம்ப சுமாரான துணுக்குகள், 5வது மட்டுமே அருமை

கோவி.கண்ணன் said...

//ILA said...
ஐயா. ரொம்ப சுமாரான துணுக்குகள், 5வது மட்டுமே அருமை
//

இருந்தால் என்ன ? பரிசுத்தொகை எவ்வளவோ அதைப் பகிர்ந்தளிக்கக் கூடாதா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
கோவி.கண்ணன் said...
:) (அக்)குறும்பு !//
நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// இய‌ற்கை said...
அது எனக்குத் தெரியும்..உன் நாய்க்கு தெரியாதே! //

ha.hha..hhhaaaaa//

நீங்க அதிகமாகப் போடும் பின்னூட்டமே உங்க பின்னூட்டத்திற்கு பதிலாகப் போட்டுவிட்டேன்.
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
வால்பையன்
இதே போல்

:அந்த வசனகர்த்தா ஏன் இரட்டை சம்பளம் கேக்குறாராம்!

::எழுதியதெல்லாம் இரட்டை அர்த்த வசனமாம்!//

வாய் விட்டு சிரியுங்க..ஒவ்வொரு பின்னூட்டத்திலும் அசத்தறீங்க வால்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ILA said...
ஐயா. ரொம்ப சுமாரான துணுக்குகள், 5வது மட்டுமே அருமை//

இளா சொன்னா சரியாகத்தான் இருக்கும்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கோவி.கண்ணன் said...
//ILA said...
ஐயா. ரொம்ப சுமாரான துணுக்குகள், 5வது மட்டுமே அருமை
//

இருந்தால் என்ன ? பரிசுத்தொகை எவ்வளவோ அதைப் பகிர்ந்தளிக்கக் கூடாதா ?//

கோவி எப்போ தருமியாக மாறினார்?

மங்களூர் சிவா said...

//4.அதோ போறாரே..அவர் பின் அழகை ரசிப்பவர்
அப்படியா
ஆமாம்..கையில் கிடைக்கிற ஒரு குண்டூசியைக்கூட விடமாட்டார்//

:))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா

தீபக் வாசுதேவன் said...

>>2.டாக்டர் நோயாளிக்கு வலது கண்ணுக்கு பதிலா..இடது கண்ணுல ஆபரேஷன் பண்ணிட்டீங்க
அதனால் என்ன..வலது கண்ணுல தையல் பிரிச்சுடறேன்

கல்வியில் ஆர்வமில்லாமல் துட்டு கொடுத்து மெடிக்கல் காலேஜ் சேரும் அரைவேக்காடுகள் பின் என்ன செய்யும். "சொத்தை பல்ல பிடுங்க சொன்ன, 'நீ டாக்டரா நான் டாக்டரா தான் கேட்கும்"

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தீபக் வாசுதேவன் said...

"சொத்தை பல்ல பிடுங்க சொன்ன, 'நீ டாக்டரா நான் டாக்டரா தான் கேட்கும்"//

அட இதுக்கூட நல்லாயிருக்கே