Wednesday, June 3, 2009

அ.தி.மு.க., எம்.பி.க்கள் பதவி பறிபோகுமா?

15ம் நாடாளுமன்றத்திற்கு..சமீபத்தில் அ.தி.மு.க., சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள்., பதவி பறிபோகுமா என்று தெரியவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் அனைவரும்..திங்கள் மற்றும் செவ்வாய் அன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள்..கடவுள்சாட்சியாகவும்..தி.மு.க.,வினர் மனசாட்சியாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆனால்...தமிழக எம்.பி..,க்கள் ஒவ்வொருவரும் பிரமாணம் எடுத்து முடிந்ததும்..அனைத்து தமிழக எம்.பி., க்களும், கட்சி வேறுபாடு பார்க்காது..மேசையைத் தட்டி..தங்கள் வாழ்த்துக்களையும்..மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

இது..இன்றைய..அ.தி.மு.க.,வின் அரசியல் நாகரிகத்திற்கு முரணானது..ஆனதால்..மேலிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமா என்று தெரியவில்லை.

எம்.பி.க்களின் பதவி பறிபோகுமா அல்லது சட்டசபையில் எஸ்.வி. சேகர் போல டம்மியாய் இருப்பார்களா? என போகப்போகத் தெரியும்.

7 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்ன ஒரு வில்லத்தனம்

முரளிகண்ணன் said...

\\என்ன ஒரு வில்லத்தனம்\\

repetteey

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அடிமை வாழ்க்கை வாழுறத்துக்கு எம்.பி பதவி எதுக்கு?
இவர்களுக்கெல்லாம் அரசியல் கொள்கை கோட்பாடு!?

VSK said...

திமுக எம்பிக்களும் கைதட்டினார்களாமே!
அப்போ தமிழகத்தில் மீண்டும் தேர்தலா?
:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
SUREஷ்
முரளி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோதிபாரதி said...
அடிமை வாழ்க்கை வாழுறத்துக்கு எம்.பி பதவி எதுக்கு?
இவர்களுக்கெல்லாம் அரசியல் கொள்கை கோட்பாடு!?//

அதுதானே! எல்லாம் பதவி படுத்தும் பாடு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//VSK said...
திமுக எம்பிக்களும் கைதட்டினார்களாமே!
அப்போ தமிழகத்தில் மீண்டும் தேர்தலா?
:))//

எட்டு தொகுதிகளுக்குத்தானே! வருகைக்கு நன்றி VSK