Sunday, February 2, 2020

வள்ளுவத்தில் தினம் ஒரு தகவல் - 30

அவனுக்கு வயதாகிறது..

வயதாக..வயதாக..பலம் குறைகிறது.உடல் நோய்வாய்ப் படுகிறது.

உடலை விட்டு நோய் விலகாது வருத்துகிறது.

ஆனாலும்..வாழும் ஆசைக்கு குறைவிருக்காது.மரணத்தை விரும்பி ஏற்கமாட்டான்.

நான் சொன்ன இவை, அவனுக்குமட்டுமில்லை..

ஒவ்வொருவரின் மனநிலையும் இதுதான்.

அதுபோலத்தான் சூதாட்டமுமாம்.

முதலில் இழப்பு ஏற்படும்..அந்த இழப்பினைப் பிடிக்க மீண்டும் முயற்சிக்கச் சொல்லும்..இப்படி ஆசை நீண்டுக்கொண்டே இருக்குமாம்.

இதையே இக்குறளில் வளுவர் சொல்கிறார்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர் (940)

பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வர வர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றுதான்.

No comments: