Monday, February 24, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 59

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயைவிடக் கொடுமையாகவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும் என்கிறார் இக்குறளில்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (202)


 மிக மிக ஆழமான பொருள் பொதிந்த குறள்.

தீயவை நமக்குத் தீமை தருவதால், அத்தகைய தீமைகள் தீயை விடவும் அஞ்சப் படும்.


இதில் இன்ன பெரிய ஆழமான அர்த்தம் இருக்கப் போகிறது?

தீ யை வைத்துதான் சமையல் செய்கிறோம்.தீ நம் அன்றாட வாழ்வில் பல நிலையில் பயன்படுகிறது/.

ஆனால்...தீ அழிக்கவும் செய்கிறது

வீட்டையும், நாட்டையும் எரித்து சாம்பலாகி விடும்.

அது போலத்தான் தீயவைகளும்.

தீயவை என்றால் என்ன ?

உதாரணத்திற்கு....

உணவு நல்லது தான். அதையே அளவுக்கு அதிகமாக உண்டால் இல்லாத பிரச்சினகைள் எல்லாம் வந்து சேரும். அதுவே நம் உயிர்க்கு உலை வைத்து விடும். அளவுக்கு அதிகமான தீயைப் போல.

அது சரி..ஏன் வள்ளுவர் "தீயினும்" என "உம்"மை சேர்த்தார்.


தீ தொட்டவுடன் சுடும். விலகினால் சுடாது.

ஆனால், தீயவையோ, தொடும் போதும் சுடும். விட்டு விலகிய பின்னும் சுடும், . வருத்தும். அதனால், தீயினும்.,அதாவது தீயைக்காட்டிலும் என்று பொருள் படுகிறது அல்லவா?

. தீயவற்றை விலக்குவோமாக!

No comments: