Friday, February 7, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 35



தீயதை சொல்லக்கூடாது என்று சொல்வார்கள்/

ஆனால், வள்ளுவர் சொல்கிறார்..

தீயதை சொன்னால் கூடப்  பரவாயில்லையாம்.ஆனால்,பயனில்லா சொற்களை சொல்லாமல் இருப்பது நல்லது என்கிறார்,

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று. (197)

தீயவை என வள்ளுவர் நேரடியாக சொல்லாவிடினும், நலம் பயக்கா சொற்கள் என்கிறார்.

சான்றோருக்கு வள்ளுவர் உரைப்பது போல குறளைப் படியுங்கள்..(அதாவது சான்றோருக்கு அடுத்து ஒரு கமா போட்டுப் பாருங்கள்)

சான்றோர் எப்போதும் நல்ல பயனுள்ள இனிமையான விஷயங்களையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை, கசப்பான விஷயங்களைக் கூட நன்மையைக் கருதிக் கூறலாம்.ஆனால்,பயனில்லா விஷய்ங்களைச் சொல்லக் கூடாது என்று பொருள் கொள்ளலாம்.(பரிமேல் அழகர் உரைப்படி)

பயனில சொல்லாமை அதிகாரத்தில் மேலும் அவர் சொல்லும் குறள்களின் பொருள்களையும் காண்போமாக..

பயனற்ற சொற்களைக் கூறுபவர்களை..அனைவரும் இகழ்ந்துரைப்பார்கள்.

பயனளிக்காத சொற்களை விடுத்து மனதில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

நாமும் பேசும்போது இனி பயனுள்ள சொற்களை மட்டுமே பேசுவோமாக!





No comments: