Tuesday, February 25, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 61




நம் நாடு,   துறவிகளை கொண்டாடும் அளவு  வேறு எந்த நாடாவது, சமுதாயமாவது கொண்டாடி இருக்கிறதா என்று தெரியவில்லை.



நீத்தார் பெருமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே வைத்து இருக்கிறார்.  
.

 எத்தனை சாமியார்கள்..அவர்களில் போலி எவ்வளவு? 
அவர்களுக்குப் பணத்தைக் கொண்டு போய்க் கொட்டும் மக்கள்.

ஆனால் உண்மையில்
எல்லாம் துறந்தவனுக்கு எதிலும் நாட்டம் இருக்கக் கூடாது....

ஆதலால், நாம் நல்லவர்களைப் பார்த்து(என நம்மிடம் தேர்வை விட்டு விடுகிறார்),அவர்களின் சொல்படி கேட்பதுதான் என்பது உலகில் உள்ள அனைத்து நூல்களின் முடிவு என் கிறார் வள்ளுவர்...

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு (21)


ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,சான்றோர் நூலில் விருப்பமுடனும்,உயர்வாகவும் இடம் பெறும்..


மேலும்..

ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவனே,துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான் என இக்குறளில் சொல்கிறார்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (24)

உறுதியென்ற அங்குசம் கொண்டு ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன்,துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான் என்கிறார்.

போலிகளைக் கண்டு ஏமாறக்கூடாது

No comments: