Tuesday, February 18, 2020

வள்லுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 50

கோபம்..

இது வராமல் இருக்க வேண்டும் என முயன்று அதில் நாம் அனைவருமே தினமும் தோற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும்.இல்லையேல் அந்த சினமே அவனை அழித்துவிடுமாம்.

அவனை மட்டுமின்றி, அவன் சுற்றத்தையும் அழித்துவிடும் தீயாம் சினம்

எல்லையில்லா சினம் கொள்பவர்கள் இறந்தவர்க்கு ஒப்பாவார்களாம்..

இப்படியெல்லாம் சொல்லும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்.

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற (304)

இதன் பொருள்...சினம் கொள்பவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மன்மகிழ்ச்சியும் மறைந்து போய்விடும்.

நாம் ஏன் நாள் முழுதும் சந்தோஷமாக இல்லை? மனதில் இன்பம் இலலை?


எப்போதாவது மகிழ்கிறோம், எப்போதாவது சிரிக்கிறோம்

இந்த மகிழ்ச்சியையும், சிரிப்பையும் நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ளும் பகைவன் யார் தெரியுமா ?

வேறு யாரும் அல்ல, நம் கோபம் தான்.

கோபம்தான் நம் புன்னகையையும், சந்தோஷத்தையும் கொல்கிறது.

.கோபத்தை விடுங்கள். மனம் அமைதியாகும். அமைதியான மனதில் இன்பம் , ஆனந்தம், புன்னகை எல்லாம் பிறக்கும்.


No comments: