Friday, February 28, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -65



அவனும் அவளும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்தார்கள். திருமணமும் செய்து  கொண்டார்கள்.  திருமணம் செய்து கொண்ட கொஞ்ச நாள் வாழ்க்கை மிக இனிமையாக  இருந்தது.

நாள் ஆக நாள் ஆக, இனிமை குறையத் தொடங்கியது.

காரணம் என்ன ?

வள்ளுவர் சொல்கிறார்

நாள் ஆக நாள் ஆக ...ஒருவர் மற்றவரின் குறைகளை காண ஆரம்பித்து விடுகிறார்கள். அதுதான் காரணமாம்.

மனைவி கணவனின் குறையை கண்டு அதை அவனிடம் சொல்கிறாள்.

அவனுக்கு கோபம் வருகிறது.

நீ மட்டும் என்ன உயர்வா என்று அவன் அவளின் குறைகளை கண்டு சொல்கிறான்.

அவளுக்கு கோபம் வருகிறது.

 இதுதான் காதல் குறையக் காரணம்.

காதல் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் ஒருவர் மற்றவரின் குறைகளை காணாமல் அவர்களின் நல்ல திறமைகளை கண்டு பாராட்ட வேண்டும்.

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு (1298)

தவறு கண்டு சிரித்தால், அது இழிவு என்று எண்ணி, அவருடைய திறமைகளை நினைக்கும் உயிர் போல காதல் கொண்ட மனம் ”   


ஆகவே..

கணவன், மனைவியின் நல்ல பண்புகளை, திறகைகளை பாராட்டட்டும்.அவளை உயர்வாக பேசட்டும்.

அதே போன்று கணவனின் நல் பண்புகளை, திறமைகளை பாராட்டட்டும்.அவனை உயர்வாக பேசட்டும்..

வாழ்வு முழுதும், அவர்கள் காதல் வளர்ந்து கொண்டுதானே இருக்கும்.



No comments: