Wednesday, February 19, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 52

கற்றது கைம்மண் அளவு  என்றாலும்..

படித்தவர்கள், நிறையப் படித்தவர்கள் சொல்வதைக் கேட்பார்கள்.அதில் இருக்கும் நன்மை, தீமைகளை அலசி ஆராய்வார்கள்.

தவிர்த்து மேலும் மேலும் படிப்பார்கள்.

இப்படியெல்லாம், படித்தும் , கேட்டும் தெரிந்து கொள்கிறார்களே, அதன்படி நடந்து கொள்கிறார்களா?

ம்..ஹூம்...மாட்டார்கள். அது ந்டைமுறைக்கு சரிவராது என்பார்கள்.

இப்படிப்பட்ட அறிவாளிகளைத்தான் திருவள்ளுவர் முட்டாள்கள் என் கிறார்


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல் (834)


படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிட முட்டாள்கள் யாரும் இருக்கமுடியாது


நல்லவற்றை படிக்க வேண்டும்.

படித்ததன் பலன்களை உணர வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, படித்து அதன்படி வாழ வேண்டும்.
.

No comments: