Thursday, February 6, 2020

வள்ளுவத்தில் தினம் ஒரு தகவல் - 34

சிரிப்பு ஒரு அருமருந்து

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்

என்றெல்லாம் சிரிப்பின் மகத்துவத்தைப் பற்றிக் கூறுவார்கள்.

இயற்கை..மனிதனுக்கு மட்டுமே சிரிப்பையும், நகைச்சுவை உணர்வையும் கொடுத்துள்ளது.

திருவள்ளுவரும்..நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதை ஒரு சில குறள்கள் மூலம் சொல்லியுள்ளார்.

அவற்றில் ஒன்று..

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள் (999)

நண்பர்களுடன் சிரித்து மகிழ்ந்து பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் தெரியும்

என்கிறார்.

அதாவது, நகைச்சுவை உணர்வு அல்லாதவர்கள் என்றும் இருட்டிலேயே இருப்பவர்கள் போன்றவர்களாம்.

சிரித்து வாழ்பவர்கள் என்றும் தனித்தும் இருக்க மாட்டார்கள்.உறவும், சுற்றமும் உடன் இருக்கும்.

சிரித்து வாழ்வோமாக..



No comments: