Sunday, May 31, 2020

வள்ளுவர் பெண்களைப் போற்றவில்லையா - 5

கணவன் என்பவன் நற்பண்புகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.அப்போதுதான் ஒரு பெண்ணின் இல்வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஆக, இல்வாழ்க்கை சிறப்புற அமைய நற்பண்புள்ள கணவன் வேண்டும் என் கணவனிடம்தான் குறை கண்டார் வள்ளுவர்.பெண்களிடம் அல்ல

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு (58)

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிருக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.

கணனிடம் காணப்படும் அந்த நற்பண்புதான் குடும்பத்தின் சிறப்பு.அந்த நற்பண்புதான் புகழுக்குரிய இல்வாழ்க்கை அமைய முக்கியக் காரணமாக அமையும்.தம்மைப் பழித்து பேசுவோர் முன் தலைநிமிர்ந்து நடக்க முடியும்.

அப்படி அமையும் நற்பண்புள்ள குடும்பம் மேலும் சிறப்பது நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை (59)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நங்கலம் நன்மக்கட் பேறு (60)

இப்படி எல்லாவற்றிற்கும் தேவையான நற்பண்புகளைமுதலில் பெற வேண்டியவன் கணவன்.

இப்படிச் சொல்லும்போதே கணவனைவிட பெண்ணான மனைவியை அவர் போற்றுவது தெரியவில்லையா?

இனி மேலும் சில குறள்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம் 

No comments: