Thursday, May 21, 2020

நானும் ரௌடிதான் - 7

அப்போது உள்ளே நுழைந்தவர் சரோஜா..

நான் உடனே பாபு அங்கிளிடம்..அவளைக் காட்டி, "இதோ வர்றாங்களே...சரோஜா ..அவங்கதான் இவ்ரோட மனைவி....இவங்க இல்லை"என்றேன்.

அதற்குள் அங்கு வந்த சரோஜா, கையில் அவருக்கான பூத் ஸ்லிப்பை வைத்திருந்தார்.அவர் என்னைப் பார்த்து, :கண்ணு..இதுவும் இவர் சம்சாரம்தான்..என் சக்களத்தி "என்றார்.

"சக்களத்தி  என்றால்.." என்றேன் நான்.

அதற்கும் பூத் அதிகாரி உட்பட அனைவரும் சிரித்தனர்.அந்த சிரிப்பைப் பார்த்ததும்..ஓரளவு விஷயத்தைப் புரிந்து கொண்ட நான்  வெட்கத்துடன் நெளிந்தேன்.

இந்த சம்பவத்தை அவ்வப்போது கூறி கடைசிவரை பாபு அங்கிள் என்னை
நையாண்டி செய்வார்.

நான் அன்றே அம்மாவிடம்.."அம்மா..இந்த கிருஷ்ணனுக்கு இரண்டு சம்சாரம்மா"என்றேன்.

அம்மா அதைக் கண்டு கொள்ளாமல்'பெரிய பேச்செல்லாம் பேசாதே" என என்னை அடக்கி விட்டார்.

நாட்கள் ஓடின..

அவ்வப்போது நான் குள்ள கோவிந்தனை சந்திப்பதும்..குப்பால் கடையில் சைக்கிள் எடுப்பதும் தொடர்ந்தது.

ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் ஓடும் பஸ்ஸில் ஏற முயன்றவரிடம், பக்கத்தில் குள்ள கோவிந்தன் இருக்கும் தைரியத்தில்"ஏய்யா..பாத்தா படிச்சவனாட்டம் இருக்க..ஓடற பஸ்ஸுல ஏற்றியே" என்றேன்.

ஒரு சின்னப்பையன் (அவரைப் பொருத்தவரை..ஆனால் எனக்குள் நான் ரௌடியாயிற்றே) அவரை கண்டிப்பது போல சொன்னதும், தன்மானம் மிக்க அந்த மனிதர்.."நீ யாரு எனக்குச் சொல்ல..சின்னப்பையன் உனக்கு எதுக்கு இந்த வேலை"  என்றார்.

அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் உதறலுடன் நான்கோவிந்தனைப் பார்க்க, கோவிந்தன்..கைகால்களை உதறிக் கொண்டு.."டேய்..யார்டா..இந்தப் பையங்கிட்ட ராங்க் பண்றது" என குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

பஸ்ஸி ஏற முயன்ற அந்த மனிதனைப் பார்த்து, "பார்த்தியா ஐயாவோட வேலையை..சாதாரணமா நினைக்காத" என்று சொல்லிவிட்டு, கோவிந்தனிடம், "நீங்க வாங்க அங்கிள்..இவங்களுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிக்கிட்டு" என அழைத்து வந்தேண்.

அதற்குள் அங்குக் கூடியிருந்த  சிறு கூட்டம் எங்களை வியப்பாகப் பார்க்க..கர்வத்தில் என் தலை சற்றே உயர்ந்தது.

No comments: