Friday, May 29, 2020

தந்தையிடம் சேர்த்த நாடகம்

பலர் கேட்கிறார்கள்..

நாடகங்களால் என்ன பயன்..நாடகங்கள் நசிந்து விட்டன என்றெல்லாம்..

சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், "சென்னையின் ஜனத்தொகை கிட்டத்தட்ட 70லட்சம் அதில் .1 சதிவிகிதமாவது (அதாவது 7000 பேராவது) உங்கள் நாடகங்களைப் பார்க்கிறார்களா? என்று.

உண்மைதான்..

ஆனால்.. பார்ப்பதில்லைதான்..ஆனால் நாடகங்கள்  பலரை திருத்தியுள்ளன.

அதற்கு ஒரு உதாரணம்..

தந்தைக்கு மகன்களிடம் உள்ள பாசத்தை விவரிக்கும் நாடகம்  ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன்னால் எங்களது சௌம்யா குழு "என்றும் அன்புடன்" எனும் பெயரில் அரங்கேற்றியது.

நாடகம் முடிந்ததும்..ஒரு ரசிகர்.. என்னிடமும், தந்தையாக நடித்த ரமேஷ் அவர்களிடம்  பேச மேடையில் ஏறி எங்களிடம் வந்தார்.

அவர் நாடகத்தைப் பார்த்து கண்கள் கலங்கியிருந்தார் என்பதை சிவந்த கண்கள் மூலம் நாங்கள் உணர்ந்தோம்..

நாடகத்தைப் பாராட்டியவர்..கடைசியில் துக்கம் தொண்டைய அடக்க சொன்னார், "சார்..எங்கப்பாவுக்கும் எனக்கும் பத்து வருஷங்களாக பேச்சு வார்த்தை யில்லை.ஆனால் உங்கள் நாடகம் இன்று என்னை மாற்றிவிட்டது..நாளைக்கே திருச்சி சென்றுஎங்கப்பாவைப் பார்த்து மன்னிப்புக் கேட்கப்போகிறேன்.என் தவறை உனர்ந்து கொண்டேன்..உங்களது நாடகம் மூலம் "என்றார்.

இதைத்தவிர வேரு ஒரு கலைஞனுக்கு என்ன வேண்டும்.

7000 நபர்கள் கூட நாடகம் பார்க்க வருவதில்லைதான்..ஆனாலும் இதுபோல ஒரு நபர் திருந்தினாலும், சென்னை மக்கள் 70லட்சமும் பார்த்த திருப்தி ஏற்படுகிறதே..அதுவே நாடகத்தின் சக்தி.

No comments: