Wednesday, May 20, 2020

நானுன் ரௌடிதான் -6

அப்பா..எப்படியும் தேர்தல் அன்று என்னை பாபு அங்கிளோடு அனுப்ப மாட்டார் என எனக்குத் தெரியும்..அதனால்..சொல்லாமல் அன்று கீளம்பிவிட வேண்டும் என் அதீர்மானித்தேன்.

அம்மாவிடம் மட்டும், "ஞாயிற்றுக்கிழமை என் ஃபிரண்ட் நாராயணனுடன் ஹோம் ஒர்க் செய்ய அவன் வீட்டுக்குப் போய்விடுவேன்.சாப்பாடு அவன் வீட்டில்தான்' என்று சொல்லிவிட்டேன்.

அரை ரௌடி ஆகிவிட்டேனே..ஆகவே அம்மாவிடம் பொய் சொல்வது எளிதாயிற்று.

ஞாயிற்றுக்கிழமை அப்பாவுக்கு முன்னாலேயே எழுந்துவிட்டேன். ஞாபகமாக அப்பாவின் வேஷ்டி ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டேன்.இடுப்பில் அது நிற்காது என்பதால் ஒரு பெரிய பெல்டை இறுக்கிக் கட்டிக் கொண்டேன்

குப்தா ஸ்கூல்தான் தேர்தல் நடைபெற இருந்த பள்ளி. அதிலிருந்து 100 மீட்டர் தள்ளி..ஒரு டேபிள், சேர் போட்டு அந்தக்கட்சி பூத் ஸ்லிப் வழங்கிக் கொண்டிருந்தது.

பாபு அங்கிள்தான் அக்கட்சியின் பூத் ஏஜன்ட்.என்னை பபௌ அங்கிள் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஏஜெண்டாக உள்ளெ அழைத்துப் போவதாக ஏற்பாடு.

அதற்கு முன்னால் பாபு என்னிடம், "ஓட்டு போட வருபவர் பெயர் அதிகாரி சொல்வார்.நாம் வேட்பாளர் லிஸ்டில் அவர் பெயரை மார்க் செய்து கொள்ள வேண்டும் என்றார்.ஆள் மாறி போட்டால் அதை சேலஞ்ச் செய்யலாம்.மறுக்கலாம்" என்றார்.

ஓரளவு எனக்குப் புரிந்தது.

எங்கள் வீட்டில் கிருஷ்ணன் என்ற தோட்டக்காரன் வேலை பார்த்து வந்தான்.அவன் மனைவி சரோஜா எங்கள் வீட்டுலேயெ வேளை செய்து வந்தாள்.

கிருஷ்ணன் அந்த பள்ளியில் ஓட்டுப் போட மனைவியுடன் வந்தான்.

ஆனால்..மனைவி சரோஜா இல்லை சின்னம்மா..

உடனே நான் சேலஞ்ச் செய்தேன்.

"உட்கார்..உட்கர "என்றார் பாபு அங்கிள்.நான் உறுதியாக நின்றேன்.
பூத் ஏஜென்ட் என்ன செய்வது எனத் தெரியாது விழித்தார்..

அப்போது...உள்ளே நுழைந்தவரைப் பார்த்து அதிர்ந்தேன்...  

No comments: