Sunday, June 14, 2009

மகளிர் இட ஒதிக்கீடு மசோதா...ஒரு பார்வை

நாடாளுமன்றத்தில் பத்து ஆண்டுகளூக்கு மேல் நிறைவேற்றப் படாமல்..ஒவ்வொரு தொடரின் போதும் பேச்சளவிலேயே இருந்து வருகிறது இம் மசோதா..

அரசியல்வாதிகள்..ஆதாயம் கருதி இதைச் சொல்லப் போக...இப்போது தவிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்..ஒரு அரசியல்வாதி...இம் மசோதா..இப்படியே நிறைவேறினால்..நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்கிறார்..(இப்படி அனைத்து அரசியல்வாதிகளும் கூறினால்...மசோதாவை நிறைவேற்ற வேண்டாம்..நாடும் இவர்களிடமிருந்து தப்பிக்கும்).வேறு ஒருவரோ..இதிலும் உள்
ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்.வேறு ஒருவர் 20% ஒதுக்கீடு போதும் என்கிறார்.

இம் மசோதா..இப்படியே..நிறைவேறினால்..தற்போது உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆன..543க்குள் அது வராது.33 சதவிகிதம் எம்.பி.க்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்..(எய்ம்ஸ்,ஐஐடி 27% ஒட ஒதுக்கீடு போல)அப்போது 724 எம்.பி.க்களுக்கு மேல் ஆகும்..இப்போதே..நாடாளுமன்ற கூட்டத்தொடர் செலவுகள்,எம்.பி.,க்களுக்கான சலுகைகள் எல்லாம் கோடிக் கணக்கில் செலவாகிறது..மேலும் கோடிகள் செலவு அதிகரிக்கும்..நாடாளு மன்றத்தில்..3 தொகுதிகளுக்கு ஒரு தொகுதியில்..2 எம்.பி.க்கள் இருப்பார்கள்.

இது எல்லாம்..மசோதா நிறைவேறினால்..நடைமுறையில் ஏற்படப் போகும் மாற்றங்கள்.

இனி இது பற்றி என் எண்ணம்..

இன்று..அனைத்துத் துறையிலும் சவால் விடும் அளவு பெண்கள் வளர்ந்து வருகின்றார்கள்..தேர்வுகளில்....முதல் இடங்களைப் பிடிப்பதும்...அதிக எண்ணிக்கையில் இவர்கள் தேர்ச்சி பெருவதும் கண்கூடு.அவர்களை...இன்று..தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்று..இட ஒதுக்கிட்டிற்குள் கொண்டுவரவேண்டிய அவசியமில்லை.(அவசியம் என நீங்கள் நினைத்தால்...கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் இட ஒதுக்கீடு அவர்களுக்கு கொடுங்கள்)

பெண்களுக்கு சம உரிமை உள்ளது...மறுக்கவோ..மறைக்கவோ இல்லை..

இன்று நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின்..செயல்பாடுகள்..சோனியா என்ற பெண்மணியிடம் உள்ளது.

டெல்லி முதலமைச்சர் ஷீலாதீக்க்ஷித்

மேற்குவங்க ..இன்றைய ரயில்வே அமைச்சர்..மம்தா பேனர்ஜி

யு.பி.,யின் மாயாவதி

தமிழகத்தில்..ஒரு பெரும் கட்சியின் தலைவியும்..முன்னாள் முதல்வருமான ஜெ

மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் முதல் குடிமகன் பிரதீபா பட்டேல்

பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார்

நாடாளுமன்ற எதிர்க் கட்சி துணைத்தலைவர் சுஷ்மா சிவராஜ்..

இவர்கள் எந்த ஒதுக்கீட்டில் அரசியலில் முக்கியமான இடத்திற்கு வந்தார்கள்..

இட ஒதுக்கீடு என பெண்களை சிறுமைப்படுத்த வேண்டாம்.

'எங்கள் உண்மையான நோக்கம்..பெண்கள் முன்னேற்றம்தான் 'என்று சொல்லும் அரசியல்வாதிகளே...நீங்கள் சொல்வது உண்மையெனில்..இன்று தனித்தொகுதிகள் இருப்பதுபோல..மூன்று நாடாளுமன்றத்திற்கு ஒரு தொகுதி பெண்களுக்கு என ஒதுக்கி பெண் வேட்பாளர்களை நிறுத்துங்கள்.(உதாரணத்திற்கு..தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 13 பெண்களுக்கு..234 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதி பெண்களுக்கு)..அது போதும்.

அதைவிடுத்து..720 நாடாளுமன்ற உறுப்பினர்கள்..என்ற நிலை வருமேயாயின்..தனிக்கட்சி ஆட்சிப் போய்...தொங்கு நாடாளுமன்றம்.என்ற நிலை நிரந்தரமாக உருவாகும்..அவ்வப்போது..தேர்தல்கள் நடக்கும் நிலை உருவாகும்.

5 comments:

Unknown said...

அரசில்யல் கட்சிகள் ஏதோ தங்கள் சுய நலனுக்காக இந்த பிரச்சினையை கையில் எடுப்பதும் பிறகு கைவிடுவதுமாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.

தங்கள் கருத்திற்கு நான் உடன் படுகிறேன். அப்படி செய்தால் நன்றாக இருக்கும்.

குடுகுடுப்பை said...

என்னது அப்சல் குருவ தூக்கில போட்டாங்கலா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ananth
தமிழினி
குடுகுடுப்பை

நசரேயன் said...

நல்ல அலசல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்