Thursday, July 9, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (10-7-09)

1.மனிதரில் மூன்று பிரிவு உண்டு.விலங்கு,மனிதன்,தேவர்..தனக்காக வாழ்பவன் விலங்கு, பாதி தனக்காகவும்...மீதி பிறருக்காகவும் வழ்பவன் மனிதன்...பிறருக்காகவே வாழ்பவன் தேவன்

2.யார் வீட்டுக் கூரை எறிந்தால் என்ன...என் வீடு பத்திரமாக இருக்கிறது என்ற சுயநலத்துடன் இருக்காதீர்கள்.நாளையே உங்கள் வீடு எரியும் போது மற்றவர்கள் அப்படி எண்ணிவிட்டால்?

3.அவன் உயர்ந்தவன்..நான் தாழ்ந்தவன்..அவ்னுக்கு எல்லாம் தெரியும்...எனக்கு தெரியாது...என்றெல்லாம் தாழ்வு மனப்பான்மையுடன் இராதீர்கள்.பூமிக்கடியில் புதைந்து கிடக்கும்..கரித்துண்டுதான்..ஒருநாள் வைரமாக மிளிருகிறது.

4.மழை தனக்காக பொழிவதில்லை
மரங்கள் தமக்காக வளர்ந்து கனிகளை அடைவதில்லை
சூரியன் தனக்காக உதிப்பதில்லை
ஆறுகள் தனக்காக ஓடவில்லை
காடுகள் அவற்றிற்காக வளரவில்லை
கடல்கள்..முத்தையும்,மீங்களையும்,உப்பையும் தமக்காக வைத்திருக்கவில்லை
பிறருக்கு கொடுக்கவே இவை இப்படி
ஆனால்...மனிதன் மட்டுமே..தனக்காக வாழவேண்டும் என எண்ணுகிறான்.

5.marriage
It is an agreement in which a man loses his bachelor's degree and a woman gains her master's

6.காதலன்; நாம ஓடிப்போய் ரிஜிஸ்தர் ஆஃபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கலாம்
காதலி;நாம ஓடத்தெரிஞ்சவங்க..சரி...ஓடத் தெரியாதவங்க எங்க போய் கல்யாணம் செஞ்சுப்பாங்க?

5 comments:

*இயற்கை ராஜி* said...

me the firstayyy...

Unknown said...

அனைத்தும் நன்று. நல்ல சிந்தனைக்குரியவை.

மங்களூர் சிவா said...

6வது கேள்வி சூப்பர்!
:))))

நையாண்டி நைனா said...

supero super.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

இய‌ற்கை
ananth
சிவா
நைனா