Sunday, July 12, 2009

நான் யார் ..நான் யார் ...

நான்
உடல் வலிமையுள்ளவன் என்கிறாயே
உன் அன்னைக்கு நன்றி சொல்
உதிரத்தை பாலாய் கொடுத்தவள்
அவர்

நான்
பண்புள்ளவன் என்கிறாயே
உன் தந்தையை வணங்கு
உன்னை ஆக்கியவர்
அவர்

நான்
அறிவாளி என்பவனே
உன் ஆசிரியரை நினை
உன் அறிவை வளர்த்தவர்
அவர்

நான்
நல்ல கணவன் என்கிறாயே
உன் மனைவியைக் கேள்
உனக்கு அப்பெயர் வரக் காரணம்
அவள்

நான்
நல்ல தந்தை என்பவனே
உன் வாரிசுகளைக் கேள்
உன் கடமையைசெய்ததை உரைப்பவர்
அவர்

நான்
நல்லவன் என பெருமையுறுபவனே
உன் உடல் சுமக்கப்படும் போது
உன் சுற்றமும்..நட்பும் சொல்லட்டும்
அதை

10 comments:

மங்களூர் சிவா said...

nice!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா

மணிகண்டன் said...

சூப்பர் போஸ்ட்.

இப்படிக்கு
நல்லவன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரியலி சூப்பர்

நல்லா இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
சூப்பர் போஸ்ட்.

இப்படிக்கு
நல்லவன்//

நன்றி

இப்படிக்கு
நல்லவனுக்கு நல்லவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ரியலி சூப்பர்

நல்லா இருக்கு//


நன்றி Starjan

அகநாழிகை said...

T.V.R. சார்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வாசு

நசரேயன் said...

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்//
நன்றி நசரேயன்