Wednesday, July 21, 2010

தமிழகம் தொழில் நகரமாகிக் கொண்டிருக்கிறது

நண்பர் அக்பர் எனது இந்த பதிவிற்கு இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுள்ளார்.

//மற்ற மாவட்டங்களுக்கும் தொழிற்சாலைகளை அமைத்தால்தானே சீரான முன்னேற்றம் ஏற்படும்//

ஆம்..உண்மை..ஆனால் அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆனால்..சென்னை போன்ற பெரு நகரங்களை ஏன் தொழிலதிபர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்..பார்ப்போம்

ஒரு இடத்தில் ஒரு தொழிற்சாலை உருவாக வேண்டுமெனில் தொழிலதிபர்கள் பல வசதிகளை எதிர்பார்ப்பதுண்டு.

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் finished pruductஐ ஏற்றுமதிக்கு எடுத்துச் செல்ல துறைமுகம் அருகில் இருக்க வேண்டும்.துறைமுகத்திற்கு எடுத்துச் செல்ல ரயில்/லாரி போன்ற போக்குவரத்து வசதி.

சுற்று வட்டாரத்தில் தொழிலாளர்கள் வசதி..

இவற்றை எதிர்பார்த்தே ஏற்றுமதியாகும் பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இடத்தைத் தேர்ந்தெடுக்கும்.

ஆகவே தான் இத்தொழிற்சாலைகள் பெரும்பாலும் பெரும் நகரை ஒட்டியே இருக்கும்.தவிர்த்து ..இப்போதே சென்னை கிட்டத்தட்ட ஒரு பக்கம் மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும்,தெற்கே செங்கல்பட்டு -மகாபலிபுரம் வரையிலும், வடக்கே ஆந்திர எல்லைவரை (பழவேற்காடு) தொழிற்சாலைகள்..பெருகி வருகின்றன.. புறநகர் பகுதிகளில் இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன.ரியல் எஸ்டேட்டும்..திண்டிவனம் வரை பல வயல் நிலங்களை பிளாட் போட்டு விற்கின்றன.ஆகவே..விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட மிகவும் குறைந்து விட்டன.தவிர்த்து நாம் போகும் இடங்களில் எல்லாம் பல விளை நிலங்கள் ஏக்கர் கணக்கில் வளைத்துப் போடப்பட்டு பொறியியல் கல்லூரியாய் மாறியுள்ளன. இனி வரும் காலங்களில் தண்ணீர் இல்லாமல் வயல்வெளிகள் மேலும் குறையும். அவை முற்றிலும் குறைந்து தமிழகம் தொழில் நகரமாய் மாறும் வாய்ப்புகள் அதிகம்.அப்போது மக்களுக்குத் தேவையான உணவு பொருள்களும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை எற்படும்.

தெரிந்தோ..தெரியாமலோ..அறிந்தோ..அறியாமலோ விவசாய நிலங்கள் குறைந்துக் கொண்டே வருவதே இது போன்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.மற்றபடி..'சுழன்றும் ஏர் பின்னது உலகம்' என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் உடனே ஒரு கேள்வி கேட்பார்..தென் மாவட்டங்களில் வேறு தொழிற்சாலைகளே கிடையாதா என..

உண்டு..திருச்சி BHEL,சர்க்கரை ஆலைகள், டெக்ஸ்டைல்ஸ்,உணவு பதனிடுதல் போன்றவை உண்டு.

அவை பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கான தொழிற்சாலைகள் மூலப்பொருள்கள் கிடைக்கும் இடத்தைச் சுற்றியே அமையும்.உதாரணமாக சர்க்கரை ஆலைகள்..கரும்பு அதிகம் பயிராகும் இடத்தின் அருகாமையில் அமையும்.

சென்னையில் TVS குரூப்..வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்..லூகாஸ்,பிரேக்ஸ்,ஃபாஸ்ட்னெர்ஸ்,கிளேட்டன் ஆகியவை பக்கம் பக்கம் அமைந்துள்ளன.

சைகிள் தொழிற்சாலைக்கான பாகங்கள் டியூப் , சைகிள் செயின்,மில்லர் லேம்ப் ஆகியவை சுற்றுவட்டாரத்திலேயே உள்ளன.

தென்மாவட்டங்களில் இப்போதெல்லாம் சிறு தொழில் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.

சில தொழில்கள் அந்த இடத்தின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப அமையும்.உதாரணமாக..கோயம்பத்தூர், திருப்பூர் ஆகிய இடங்கள் ஆடைகளுக்கும்..பின்னலாடைகளுக்கும் ஏற்ற இடம்.இவை தவிர்க்க முடியாது.

கூடியவிரைவில் தமிழகம் முழுதும் தொழிற்சாலைகள் பெருகி தொழில் நாடாய் மாறக்கூடும்.

6 comments:

Prasanna said...

எப்படியோ எல்லாரும் நல்லா இருந்தா சரி :)

vasu balaji said...

ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் இன்னோரு பக்கம் இதுக்கு எதிர்வினையா குற்றமும் பெருகும்:(

Chitra said...

தொழில் நகரங்கள் - நரகங்களாய் மாறாமல் வளமுடன் இருந்தால் சரிதான்....

Vidhya Chandrasekaran said...

எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்:)

Thenammai Lakshmanan said...

வானம்பாடிகள் said...
ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் இன்னோரு பக்கம் இதுக்கு எதிர்வினையா குற்றமும் பெருகும்:(
/

ரிப்பீட்டு.. :((

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி