Friday, July 10, 2009

ஏன் இப்படி...?

பூமி வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது...

பூமியில் வாழும் நாமும் அப்படி ஆகிக் கொண்டிருக்கிறோமா..?

ஆமாம்..என்கிறது இணைய தளம்..

எவ்வளவு சூடு பறக்கும் பதிவுகள்.ஒருவர் மீது ஒருவர் சேற்றை வீசிக் கொண்டிருப்பது ஏன்? தனிப்பட்ட முறையில் பேசுவதற்குக் கூட இப்போது பயமாய் இருக்கிறது.

நம்மிடம் புரிதல் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

சமிப காலங்களில் பாருங்கள்..சாரு,பைத்தியக்காரன்,லக்கிலுக் பதிவுகள்..நாகர்ஜுனிடம்..பைத்தியக்காரன் பகிரங்க மன்னிப்பு.

பரிசல் பதிவில்..அதிஷா ஏதோ பின்னூட்டமிட..மணிகண்டன் அதற்கு பதில் சொல்ல..பரிசல் பகிரங்க மன்னிப்பு.

இப்போது..

நர்சிம்,தீபா..பதிவுகள்.

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

உங்கள் தளத்தில் நீங்கள் உங்கள் கருத்துகளை பதிவிடுவதில் தவறில்லை.

ஆனால்..அதற்குமுன்..இது தனிப்பட்ட முறையில்..யாரையாவது புண்படுத்துமா? என யோசியுங்கள்...யோசிக்காமல் எழுதிவிட்டு..பின் மன்னிப்பு என்பதில் என்ன லாபம்

வார்த்தைகளை கொட்டி விட்டால்..அள்ள முடியாது..

வரும் நாட்களில்...

நகைச்சுவை என்றாலும்..அதனால் பிறர் மனம் துன்படும் என்றால்..அப்பதிவு வேண்டாமே....

மறப்போம்...மன்னிப்போம்..

ப்ளீஸ்...

12 comments:

மணிகண்டன் said...

***
பரிசல் பதிவில்..அதிஷா ஏதோ பின்னூட்டமிட..மணிகண்டன் அதற்கு பதில் சொல்ல..பரிசல் பகிரங்க மன்னிப்பு
***

இந்த சண்டைகளில் இதை சேர்த்தது எனக்கு அநியாயமாக தோன்றினாலும் இனி அது போன்ற பின்னூட்டங்கள் என்னிடம் இருந்து வராது. பதிவுலக வழக்கம் போல நானும் அந்த பின்னூட்டத்தை அதிஷாவிடம் காட்டிவிட்டு தான் அங்கு போட்டேன் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும் !!!! :)-

தீப்பெட்டி said...

உண்மை தான்..

ஒரு வார்த்தை மெல்லும்.. ஒரு வார்த்தை கொல்லும்..

எல்லோரும் யோசித்து நடத்தல் நன்று..

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களை நான் அறிவேன் மணி...வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தீப்பெட்டி said...
உண்மை தான்..

ஒரு வார்த்தை மெல்லும்.. ஒரு வார்த்தை கொல்லும்..

எல்லோரும் யோசித்து நடத்தல் நன்று//

நன்றி தீப்பெட்டி

RATHNESH said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்; இந்த விஷயத்தில் உங்களுடன் கைகோர்க்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி RATHNESH

மங்களூர் சிவா said...

மேட்டர் முழுசா தெரியாது அதால சும்மா அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்

தினேஷ் said...

அடுத்த நாட்டாமை பதிவா ? கோபப்படாதீங்க இன்னிக்கு மட்டும் எத்தனை பதிவு அந்த சிறு தவறுக்கு ..
விடுங்கப்பா மறங்கப்பா , இலக்கிய கூட்டம் இலக்கியத்துல ஐக்கியாமாகுங்க.. மொக்கை கூட்டம் மொக்கையிலே கும்முங்க ..

நானும் எத்தனை பேருக்குதான் இப்படி பின்னூட்டம் போடுறது ஆவ்வ்வ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சிவா
சூரியன்

*இயற்கை ராஜி* said...

only attendance..no comments:-)

அகநாழிகை said...

:(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
இய‌ற்கை
"அகநாழிகை