Monday, November 17, 2008

இவர்கள் பொழுது போகவில்லை என்றால் என்ன செய்வார்கள்...

ஜெயலலிதா- தமிழகத்தில்..வரும் நாட்களில் எந்த எந்த..ஊர்களில்..தெருக்களில் ..என்ன என்ன..சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யலாம்னு..உடன் பிறவா சகோதரியுடன் ..பையனூரிலோ..கோடை எஸ்டேட்டிலோ பேசிக்கொண்டிருப்பார்..

ராமதாஸ்-தி.மு.க. அரசின் மீது..வேறு ஏதேனும் குறை கண்டுபிடிக்க முடியுமா?..என்று யோசித்துக்கொண்டிருப்பார்...

விஜய்காந்த்-மக்கள் தொகையை எடுத்துக் கொண்டு...ஏதாவது ஒரு எண்ணினால் பெருக்கிக் கொண்டோ..வகுத்துக் கொண்டோ இருப்பார்...பின்னர் ஏதேனும் கூட்டத்தில் புள்ளி விவரம் சொல்ல.

வைகோ-வரும் தேர்தல்களில் ..அம்மாவுடன் கூட்டணி வருமா...இல்லை..திரும்ப..பழையபடியாகுமா...பம்பரம் நிலைக்குமா..என யோசித்துக் கொண்டிருப்பார்.

தயாநிதி மாறன்-தி.மு.க.விலிருந்து விலக்கிவிட்டால்...ஜெ உடன் சேர்வதா...இல்லை..விஜய்காந்த் உடன் சேர்வதா என்ற நினைப்பில் இருப்பார்.

ஆற்காட்டார்_அடுத்தமுறை மின்சாரம் வேண்டாம் என கலைஞரிடம் எப்படி கூறுவது என எண்ணிக்கோண்டிருப்பார்.

அன்பழகன்- எப்பாடுபட்டாவது இரண்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுவார்..

ரஜினி-எந்திரன் வந்ததும்..ரசிகர்களிடம் என்ன சால்ஜாப்பு சொல்வது என யோசிப்பார்.

சோ-பழைய துக்ளக் இதழ்களை புரட்டி...நான் அன்றே சொன்னேன்..என்பதற்கு..ஏதேனும் செய்தி கிடைக்குமா என எண்ணுவார்..

கலைஞர்-பொழுதா..போகவில்லையா...அந்த நேரத்தை எல்லாம்..எனக்கு கொடுங்க...எனக்கு..கவிதை எழுத..அரசு நடத்த..அழகிரி பற்றி யோசிக்க..கனிமொழி பற்றி யோசிக்க...ராமதாசிற்கு பதில் சொல்ல...இதெற்கெல்லாம் நேரம் போதவில்லை என்பார்.

8 comments:

நசரேயன் said...

பதிவர்கள் பொழுது போகலைன்னா என்ன செய்வாங்கன்னு சொல்லவே இல்ல

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
நசரேயன் said...
பதிவர்கள் பொழுது போகலைன்னா என்ன செய்வாங்கன்னு சொல்லவே இல்ல//
நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவாங்க நசரேயன்

பூச்சாண்டியார் said...

சுப்ரமணிய சுவாமியை மறந்து விட்டீர்களோ??? :D

rapp said...

super:):):)

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பூச்சாண்டியார் said...
சுப்ரமணிய சுவாமியை மறந்து விட்டீர்களோ??? :D///


அவர் ஒபாமா பற்றி தன்னிடம் ஒரு முக்கிய தகவல் இருப்பதாகவும்...விரைவில் உலக நீதிமன்றத்தில் வழக்கு போட ஏற்பாடுகள் செய்வதாகவும் சொல்லிக்கொண்டிருப்பார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// rapp said...
super:):):)///

nanri rapp

மங்களூர் சிவா said...

:))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

nanri சிவா