Friday, December 18, 2009

வேட்டைக்காரன் சாதனைக்காரன்..

தமிழ்ப் படங்களில் ரஜினி படங்கள் வசூலில் சாதனைப் படைப்பது என்பது ஆச்சரியமில்லை.ஆனால்..சமீப காலமாக ஆதவன்,கந்தசாமி,அயன் ஆகியபடங்களும் வசூல் சாதனைப் படைத்தன.

அந்த நாட்களில் சிவாஜி,எம்.ஜி.ஆர்., படங்கள்..சென்னையில் வெளியிடப்பட்ட நான்கு தியேட்டர்களிலும் நூறு நாட்கள் ஓடினால்..அதை சாதனையாக விளம்பரப் படுத்தியது உண்டு,ஆனால் இப்பொதெல்லாம் ஒரு படம் நூறு நாட்கள் ஓடுவதோ..சில்வர் ஜூபிலி ஓடுவதோ சாதனையாக இருப்பதில்லை.கந்தசாமி நொண்டி..நொண்டிதான் கடைசியில் பகல் காட்சியாகி நூறு நாட்கள் ஓடியதாக கணக்கில் காட்டப்பட்டது.

படம் ஓடாமல்..வசூல் சாதனை எப்படி..என்று கேட்டால்..

இப்போதெல்லாம்..பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் 600 பிரிண்டுகள் போடப்படுகின்றன.ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப் படுகின்றன.வெளியான ஓரிரு வாரங்களில் நல்ல வசூலுடன் சாதனைப் படைப்பதுடன்..தயாரிப்பாளர்,விநியோகஸ்தர்,தியேட்டர் உரிமையாளர்கள் என எந்த அக்ரிமெண்டில் இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது லாபம் தரத் தொடங்குகின்றன.

வேட்டைக்காரனும் அதே வழியைப் பின்பற்றுகிறான்..

படத்தில் புதுமை ஏதும் இல்லை..சுமார் தான் என செவி வழிச் செய்திகள் கிடைத்தாலும்..600 பிரிண்டுகளுடன் உலகம் முழுதும் ஒரே நாளில் வெளியாகி உள்ள இப்படம்..சென்னையில் மட்டும்..ஒரே நாளில் 126 காட்சிகளுக்கு மேல்நடைபெறுகிறது.மாயாஜாலில் ஒரு நாளைக்கு 42 காட்சிகள்.

குறைத்து மதிப்பிட்டு..ஒரு காட்சிக்கு 50000 நிகர வருமானம் என வைத்துக் கொண்டாலும்..ஒரு வாரத்தில் சென்னயில் மட்டும் 4 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளும் என்று நம்பலாம்.

இதுவரை வசூல் சாதனைப் படைத்துள்ள படங்கள் எல்லாவற்றையும் தாண்டி வேட்டைக்காரன் வசூல் அள்ளுவான் என சென்னை நகரம்,சேலம் விநியோக உரிமை பெற்றுள்ள அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

விஜய் படத்திற்கு முன் எப்போதும் இல்லா அளவிற்கு இப்படம் ஓபனிங் கொடுத்துள்ளதாம்.

எல்லாருக்கும் தேங்க்ஸ்ணா என்கிறாரா விஜய்..

5 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல தகவல்கள் , வேட்டைக்காரன் படம் எப்படி

T.V.ராதாகிருஷ்ணன் said...

Thanks for coming Starjan

பூங்குன்றன்.வே said...

ஒன்றும் சொல்வதற்கில்லை பாஸ் ::))

அக்னி பார்வை said...

யரோ வேட்டைகாரன் ரிலிஸ் கொள்ளை நோய் வந்ததுவிட்டது என்று மெஸேஜ் அனுப்பியது நினைவுக்கு வருகிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வானம்பாடிகள்
பூங்குன்றன்.வே
அக்னி பார்வை