Monday, March 29, 2010

பதிவர் சந்திப்பு ஜோக்ஸ்

(சிரிக்க மட்டுமே..- சிந்திக்க அல்ல)

1) அந்த பதிவர் ஏன் கோபமாய் இருக்கார்
பிரிட்டானியா மாரி பிஸ்கெட் தரேன்னு சொல்லிட்டு..அவருக்குத் தெரியாம பார்லே மாரியா மாத்திட்டாங்களாம்

2)அந்த பதிவர் கையிலே என்ன கொண்டு வரார்?
மைக்தான்..தனக்கு இங்கே கொடுப்பாங்களோ ..மாட்டாங்களோன்னு வீட்ல இருந்தே கொண்டு வந்துட்டார்

3)இந்த பதிவர் சந்திப்பிலே எடுத்த முடிவுகள் உங்களுக்கு சம்மதமா..
சம்மதம்னு சொல்ல மாட்டேன்..அதே சமயம் சம்மதம் இல்லாமலும் இல்லை..எல்லாருக்கும் சம்மதம் இல்லேன்னா..கண்டிப்பா என் சம்மதத்தை யார் சம்மதத்தையும் கேட்காம விலக்கிக் கொள்வேன்.

4)ஏன் பதிவர் சந்திப்பு முதல் வரிசை காலியா இருக்கு
அதில் உட்கார்ந்தா ஜாதியைப் பற்றி எழுதிடுவாங்களோன்னு எல்லாருக்கும் பயம்

5)அந்த பதிவர் ஏன் எல்லோரையும் பஸ் ஏற்றிவிட்டு..கையெழுத்து வாங்கறார்
கடைசிவரைக்கும் அங்கே இருந்தார்னு பதிவு பண்ணதான்

6)தமிழ் வலைப்பதிவர் குழுமத்திலே சேர்ந்துட்டீங்களா?
முதல்ல நான் எழுதறது தமிழா ன்னு தெரியலேன்னு..சொல்லிட்டு..சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்க..

7)பதிவர் சந்திப்பிலே கொடுத்த டீ யை நீங்க ஏன் குடிக்கல
தற்கொலை செஞ்சுக்கிட்டாலும் செஞ்சுப்பேனே தவிர யாசிச்சு டீ சாப்பிட மாட்டேன்

29 comments:

இராகவன் நைஜிரியா said...

// (சிரிக்க மட்டுமே..- சிந்திக்க அல்ல) //

என்னிக்கு சிந்திச்சு இருக்கேன்.. இன்னிக்கு சிந்திக்கிறத்துக்கு... அவ்...அவ்...

இராகவன் நைஜிரியா said...

// 1) அந்த பதிவர் ஏன் கோபமாய் இருக்கார்
பிரிட்டானியா மாரி பிஸ்கெட் தரேன்னு சொல்லிட்டு..அவருக்குத் தெரியாம பார்லே மாரியா மாத்திட்டாங்களாம் //

ஆஹா.. இப்படியெல்லாம் வேற நடக்குதா.. நடக்கட்டும்.. நடக்கட்டும்

சிநேகிதன் அக்பர் said...

நகைச்சுவையோட எழுதியிருக்கிங்க.

ஆனா சிந்திச்சு பார்த்தா மன ஆதங்கம் தெரிகிறது. (அதுக்குத்தான் சிந்திக்க வேண்டாம்னு சொன்னீங்களோ)

Ungalranga said...

//ஏன் பதிவர் சந்திப்பு முதல் வரிசை காலியா இருக்கு
அதில் உட்கார்ந்தா ஜாதியைப் பற்றி எழுதிடுவாங்களோன்னு எல்லாருக்கும் பயம் //

இதெல்லாம் வேறையா?

ரசித்தேன்..!!

மணிஜி said...

/7)பதிவர் சந்திப்பிலே கொடுத்த டீ யை நீங்க ஏன் குடிக்கல
தற்கொலை செஞ்சுக்கிட்டாலும் செஞ்சுப்பேனே தவிர யாசிச்சு டீ சாப்பிட மாட்டேன் //

இதில் உள்குத்து இருக்கிறது என்று புத்தி சொல்கிறது. மனம் ஏற்க மறுக்கிறது.

அக்னி பார்வை said...

//2)அந்த பதிவர் கையிலே என்ன கொண்டு வரார்?
மைக்தான்..தனக்கு இங்கே கொடுப்பாங்களோ ..மாட்டாங்களோன்னு வீட்ல இருந்தே கொண்டு வந்துட்டார்//

ithu suuppar

தினேஷ் ராம் said...

??

:-/

goma said...

:-)))))

Ashok D said...

நாலாவது ஜோக்கு நல்லாயிருக்குங்க

ஆனா ஜோக்குன்னா சிர்ப்பு வரனுங்க :)))

தேவன் மாயம் said...

6)தமிழ் வலைப்பதிவர் குழுமத்திலே சேர்ந்துட்டீங்களா?
முதல்ல நான் எழுதறது தமிழா ன்னு தெரியலேன்னு..சொல்லிட்டு..சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்க.///

அண்ணா!! கலாய்க்கறேளே!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
இராகவன்
அக்பர்
ரங்கன்
மணிஜீ......
அக்னி பார்வை
சாம்ராஜ்ய ப்ரியன்
Goma
Ashok
Doctor Sir

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இலக்கணம்...,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)

ராஜ நடராஜன் said...

//பதிவர் சந்திப்பிலே கொடுத்த டீ யை நீங்க ஏன் குடிக்கல
தற்கொலை செஞ்சுக்கிட்டாலும் செஞ்சுப்பேனே தவிர யாசிச்சு டீ சாப்பிட மாட்டேன் //

கூட்டத்துல கணக்கு தப்பாயிருக்கும்.இதுக்கு ஒரு ஜோக்கா:)))

Thenammai Lakshmanan said...

-ஹாஹா அனைத்தும் அருமை ராதா கிருஷ்ணன்

sriram said...

ரா.கி ஐயா,
நீங்க ஜோக் சொல்றீங்க, சில பேருக்கு சிரிப்பு வரலாம் சில பேருக்கு சிரிப்பு வராமலும் இருக்கலாம். ஆனா கண்டிப்பா சில பேரோடு எழுத்துக்கள் சிரிப்பா சிரிக்குது - இது அந்த ரகமல்ல..

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Chitra said...

very funny...... ha,ha,ha.....

Jerry Eshananda said...

ரசித்தேன்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
//பதிவர் சந்திப்பிலே கொடுத்த டீ யை நீங்க ஏன் குடிக்கல
தற்கொலை செஞ்சுக்கிட்டாலும் செஞ்சுப்பேனே தவிர யாசிச்சு டீ சாப்பிட மாட்டேன் //

கூட்டத்துல கணக்கு தப்பாயிருக்கும்.இதுக்கு ஒரு ஜோக்கா:)))//

ஐயா...ராஜநடராஜன்...எப்படி கணக்குத் தப்பாயிருந்தாலும்..அந்த குறிப்பிட்ட நபர் 'தற்கொலை"ங்கிற சொல்லை உபயோகித்திருக்க வேண்டாம்..என்பதே எண்ணம்..பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் இவை..இது புரிந்தால் சிலருக்கு சிரிப்பு வரலாம்..நரசிம்ம ராவ் களுக்கு சிரிப்பு எப்படி வரும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//thenammailakshmanan said...
-ஹாஹா அனைத்தும் அருமை ராதா கிருஷ்ணன்//

நன்றி
thenammailakshmanan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//sriram said...
ரா.கி ஐயா,
நீங்க ஜோக் சொல்றீங்க, சில பேருக்கு சிரிப்பு வரலாம் சில பேருக்கு சிரிப்பு வராமலும் இருக்கலாம். ஆனா கண்டிப்பா சில பேரோடு எழுத்துக்கள் சிரிப்பா சிரிக்குது - இது அந்த ரகமல்ல..

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

ஸ்ரீராம் தங்கள் வருகைக்கு நன்றி..அன்று அங்கு இருந்தவர்களால் ஜோக்காக ரசிக்க முடியாதது..நிலையைப் புரிந்துக் கொண்ட உங்களைப் போன்றோரால் ஜோக் காக புரிந்துக் கொள்ளப்படுவது குறித்து நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
very funny...... ha,ha,ha.....//

Thanks Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தன். said...
ரசித்தேன்....//

நன்றி ஜெரி

கோவி.கண்ணன் said...

//4)ஏன் பதிவர் சந்திப்பு முதல் வரிசை காலியா இருக்கு
அதில் உட்கார்ந்தா ஜாதியைப் பற்றி எழுதிடுவாங்களோன்னு எல்லாருக்கும் பயம்
//

:)
கஷ்டம் கஷ்டம் !

எல் கே said...

hmm pala pala arthangal athangam puthainthu iruku radhakrishnan sir :)

நாமக்கல் சிபி said...

கடைசி ஜோக்.. அவசியமில்லைன்னு நினைக்கிறேன் டி.வி.ஆர் சார்! மன்னிக்கவும்!

மீதம் உள்ளவை அருமை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//LK said...
hmm pala pala arthangal athangam puthainthu iruku radhakrishnan sir :)//

நன்றி LK

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என்.ஆர்.சிபி said...
கடைசி ஜோக்.. அவசியமில்லைன்னு நினைக்கிறேன் டி.வி.ஆர் சார்! மன்னிக்கவும்!

மீதம் உள்ளவை அருமை!//

எப்போதுமே...கொசுறு போடுபவன்..வேண்டா வெறுப்பாக போடுவதுண்டு..அதுபோல என்று எண்ணிக்கொள்ளுங்களேன்..சொல்ல வருவது புரிந்ததா!!