Thursday, March 12, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -77

இன்சொல் என்றால் என்ன?
---------------------------------------
ஒருவரை புகழ்வது, அல்லது அவரைப் பற்றி நல்லபடி கூறுவது,ஒருவருக்கு சொல்லும் அறிவுரை அல்லது ஆறுதல் மொழி இவற்றில் எது இன்சொல் ?

வள்ளுவர் இதற்கும் பதில் தருகிறார் 

இன்சொல் என்பது

பொய்யாய் சொல்லாமல், வஞ்சனையில்லாமல்,உண்மை அறிந்தவர்கள் வாயில் இருந்து வரும் சொல்லாம்

"இன்சொலால் ஈரம் அளையிப் படிநிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (91)


மேலும் சொல்கிறார்...

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு "நட்பில் வறுமை" எனும் துன்பமில்லையாம்.

"துன்புறூஉம் துவ்வாமை இல்லார்க்கும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு"

இனிமையான சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகுமாம்.

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று(100)"

இனிய சொற்களையேப் பேசுவோம்.




No comments: