Friday, March 13, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 78

ஆக்கமும் கேடும் ஒருவருக்கு அவர் பேசும் பேச்சால் வருகிறது என்கிறார் வள்ளுவர்.

அது எப்படி,,

சற்று யோசனை செய்தால்,யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், பேசுவது சரியா தவறா என்றெல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும் என்பதை உண்ர்வோம்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு (642)

ஆக்கமும், அழிவும் சொல்லால ஏற்படும் என்பதால், எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்
ஆக்கமும் கேடும் சொல்லின் சோர்வால் வரும் என்பதால் அதை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும்.

இப்படிச் சொல்லும் வள்ளுவர்..

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்கும் இல்லை என்பதுடன், கீழ் சொல்லியுள்ள குறளில்..சொல்வன்மையே செல்வங்களில் எல்லா சிறந்த செல்வம் என்கிறார்.

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று (641)

செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் சொல்வன்மை என்பவர்..கேள்வி எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ்ம் அச்செல்வஞ்
செல்வத்த் ளெல்லாந் தலை (411)

என்கிறாரே!

சற்று யோசித்தால் விளங்கும்..

சொல்வன்மை ஒருத்தரின் திறமை.அப்படிப்பட்ட திறமையினைப் பெற்றவன் செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் பெற்றவன்.

அதேநேரம்..அப்படிப்பட்டவனின் செழுமையான கருத்துகளை செவி வழியாகப் பெறுபவன் அடையும் செல்வம் , கேட்பவனின் தலையாய செல்வமாகும் என்று சொல்வது புரியும்.

நல் விஷயங்களைக் கேட்போம்..நன்மை அடைவோம்.



No comments: